ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
தமிழில் ஜனவரி 30ம் தேதி வெளிவந்த 'இசை' படத்திற்கும், ஹிந்தியில் பிப்ரவரி 6ம் தேதி வெளிவந்த 'ஷமிதாப்' படத்திற்கும் இடையே ஒரு வித்தியாசமான ஒற்றுமை உண்டு. இரண்டு படங்களின் கதையும் தமிழ் சினிமால் 80களில் மாபெரும் சாதனையாளர்களாக இருந்தவர்களின் கதை என்று பேசப்படும் ஒன்றாக அமைந்துள்ளது. ஒருவர் தனது இசைத் திறமையால் பேசப்பட்ட இளையராஜா. மற்றொருவர் இளையராஜாவின் இனிமையான பாடல்களால் மட்டுமே பல வெள்ளிவிழாப் படங்களைக் கொடுத்த நடிகர் மோகன்.
'இசை' படம் இளையராஜாவைப் பற்றிய கதையாக அமைத்திருக்கிறார்களோ என்ற சந்தேகத்தைப் படம் பார்த்த பின்னும் எழுப்பியுள்ளது. 'ஷமிதாப்' படமும் நடிகர் மோகன், அவருக்குப் பின்னணிக் குரல் கொடுத்த எஸ்.என்.சுரேந்தர் இருவரைப் பற்றிய கதையோ என சந்தேகத்தை எழுப்பியுள்ளது. ஆனால், இரண்டு படங்களிலுமே நம்ப முடியாத பல கற்பனைக் காட்சிகள் இருப்பதால் அந்த இரு சாதனையாளர்களான இளையராஜா, மோகன் ஆகியோரைப் பற்றிய கதையாக 'இருக்கு...ஆனா இல்ல..' என்பதாகவே சொல்ல வைக்கிறது.
இதை 'இன்ஸ்பிரேஷன்' என்றும் சொல்லலாம், 'இல்லுயூஷன்' என்றும் சொல்லலாம். சம்பந்தப்பட்ட இரண்டு இயக்குனர்களான 'இசை' படத்தின் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா, மற்றும் 'ஷமிதாப்' இயக்குனர் பால்கி இருவரும் வாயைத் திறந்து சொன்னால்தான் இந்த 'இருக்கு...ஆனால்...இல்ல'-க்கு இறுதி முடிவாக வரும்.