தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த வருடம் வெளியான ஹாரர் படங்களில் வணிக ரீதியாக வெற்றிப் பெற்ற படம் - யாமிருக்க பயமே. ஆர்.எஸ்.இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்திருந்த இப்படத்தை டிகே என்ற புதுமுக இயக்குநர் இயக்கியிருந்தார். இந்தப் படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாகம் தயாரிக்க இருப்பதாக அப்போது சொல்லப்பட்டது. ஆனால் அதன் பிறகு அது சம்பந்தமான தகவல்கள் எதுவும் வரவில்லை! இந்நிலையில், ஆர்.எஸ்.இன்ஃபோடெய்ன்மென்ட் தயாரிப்பில் அடுத்து படத்தை டிகே இயக்குகிறார். இது யாமிருக்க பயமே படத்தின் இரண்டாவது பாகமா என்பது குறித்து அதிகாரபூர்வ தகவல் ஏதும் இல்லை. இப்படத்தில் ஜீவா ஹீரோவாக நடிக்கிறார்.
ஆர்.எஸ்.இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனத்தின் படத்தில் ஜீவா மீண்டும் நடிப்பது திரைத்துறையில் ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது. காரணம்...ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கத்தில், ஜீவா நடிப்பில் வெளியான யான் படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது. 11 கோடியில் படம் எடுப்பதாக கூறிவிட்டு, 20 கோடிவரை செலவை இழுத்துவிட்டார் என ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் மீது குற்றம்சாட்டினார் ஆர்.எஸ்.இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனத்தை சேர்ந்த தயாரிப்பாளர் எல்ரெட் குமார். அதுமட்டுமல்ல, ரவி.கே.சந்திரன் உடன் சேர்ந்து கொண்டு ஜீவாவும் பட்ஜெட்டை அதிகமாக்கிவிட்டார் என்று சொன்னார். இப்படி சொன்ன அதே தயாரிப்பாளர் தற்போது ஜீவாவை வைத்து மறுபடியும் படம் தயாரிப்பதுதான் படத்துறையினரின் வியப்புக்குக் காரணம்!