மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
சர்ச்சை நாயகனான இயக்குநர் ராம் கோபால் வர்மா அடுத்து சுனந்தா புஷ்கரின் இறுதி வாழ்க்கையை படமாக எடுக்க திட்டமிட்டுள்ளாராம். முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவியான சுனந்தா புஷ்கர், மர்மமான முறையில் திடீரென இறந்துவிட்டார். இவரது இறப்பு கொலை என்றும் தற்கொலை என்றும் கூறப்பட்டு வருகிறது. இதுதொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. இவரின் இறப்பு குறித்து இதுவரை பல வெளிவராத மர்மங்கள் இருந்தாலும் அதனை யாரும் தோண்ட தயாராக இல்லை. ஆனால் இதனை தற்போது ராம் கோபால் வர்மா படமாக எடுக்க திட்டமிட்டுள்ளாராம். ஏற்கனவே ''நாட் ஏ லவ் ஸ்டோரி'' என்ற படத்தில் கள்ள உறவு குறித்த ஒரு கேரள உண்மை சம்பவத்தை எடுத்து அனைவரையும் பரபரப்புக்குள்ளாகினார் ராம் கோபால் வர்மா, அதேபோல் சுனந்தா புஷ்கரின் கேஸ் விவரங்கள் கிடைத்துவிட்டால் உடனே அதை படமாக எடுக்க துவங்கிவிடுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இதேபோல் மும்பை தாஜ் ஹோட்டலில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை படமாக எடுக்க அந்த ஹோட்டலின் முன்புறம் துப்பாக்கி சூடு நடந்த அடுத்த நாள் ராம் கோபால் வர்மா சென்று அந்த இடங்களை பார்வையிட்டு ஒரு கதையை உருவாக்கினார் அதுதான் “அட்டாக 26/11” என்ற பெயரில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றது. அதேபோல் சுனந்தா புஷ்கரின் கதையையும் உருவாக்கினால் அது நாடு முழுவதும் பரபரப்பாக பேச வைத்துவிடுவார் இயக்குநர் ராம் கோபால் வர்மா. பொருத்திருந்து பார்க்கலாம் என்ன நடக்குது என்று.