அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
இந்தியில் மேய்ன் ஹூன் ரஜினிகாந்த் (நான்தான் ரஜினிகாந்த்) என்ற படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை வர்ஷா புரொடக்ஷன் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படம் ரஜினியின் வாழ்க்கையை சித்தரிக்கும் விதமாக எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
"என் அனுமதி இன்று என் கதையையும், பெயரையும் பயன்படுத்தியுள்ள மேய்ன் ஹூன் ரஜினிகாந்த் படத்தை தடைசெய்ய வேண்டும்" என்ற ரஜினிகாந்த் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவின் சுருக்கம் வருமாறு:
நான் இந்தியாவில் முன்னணிசினிமா நடிகனாக இருக்கிறேன். எனது கடின உழைப்பு, தனியான வசன உச்சரிப்பு, தனி ஸ்டைல், சிறந்த நடிப்பால் மக்களை கவர்ந்து சூப்பர் ஸ்டார் என்ற அவர்கள் என்னை அழைக்கும் அளவுக்கு வளர்ந்தேன். தென்னிந்திய மற்றும் இந்தி, ஆங்கில படங்களில் நடித்தேன். எனக்கு இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். எனது குரல், உடல் அமைப்பு, ஸ்டைல் இதை யார் பயன்படுத்தினாலும் அது என்னுடையது என்பதை மக்கள் அறிவார்கள். இந்த நிலையில் மும்பையில் உள்ள வர்ஷா புரொடக்ஷன் என்ற நிறுவனம் மேய்ன் ஹூன் ரஜினிகாந்த் என்ற பெயரில் ஒரு படத்தை தயாரித்துள்ளார்கள். இதற்காக அவர்கள் என்னிடம் எந்த அனுமதியும் பெறவில்லை. இந்தப் படத்தில் என்னைப்போன்ற உருவ அமைப்பு உள்ளவரை நடிக்க வைத்து எனது குரலில் பேசி எனது ஸ்டைலை பயன்படுத்தியிருப்பதாக அறிகிறேன். எனது பெயரை களங்கப்படுத்தும் நோக்கத்துடனோ, என் பெயரை வைத்து பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடனோ இந்தப் படத்தை எடுத்துள்ளனர். இதற்கு தடைவிதிக்க வேண்டும். என்று அந்த மனுவில் ரஜினி குறிப்பிட்டருந்தார்.
இதற்கு பட நிறுவன அளித்த பதில் வருமாறு: படம் ரஜினியின் வாழ்க்கை சம்பந்தப்பட்டதல்ல. ரஜினிகாந்த் என்ற பெயர் காப்புரிமை செய்யப்படவில்லை. அந்த பெயர் யாருக்கும் சொந்தம் கிடையாது. ரஜினியை அவதூறாக சித்தரிக்கவில்லை. படம் தயாரிக்கும்போது அமைதியாக இருந்துவிட்டு இப்போது தடைகேட்பது நியாயமற்றது. மேலும் ரஜினி இழப்பீடு கேட்டு தனி வழக்கு தொடர்ந்திருக்கும்போது படத்தை வெளியிட தடைவிதிக்க கூடாது. என்று கூறியது.