ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லட்சுமி மேனன். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து கும்கி, குட்டிப்புலி, பாண்டிய நாடு, ஜிகர்தண்டா, மஞ்சப்பை, நான் சிகப்பு மனிதன் ஆகிய படங்களில் நடித்தார்! இப்படங்களை தொடர்ந்து கொம்பன் சிப்பாய் படங்களில் நடித்து வருகிறார் லட்சுமி மேனன். இந்நிலையில், தனக்கு கிராமத்து வேடங்கள், போரடித்து விட்டது என்றும், அதனால் நடிப்புக்கு குட்-பை சொல்லிவிட்டு, இனி படிப்பிலும், இசையிலும் கவனம் செலுத்தப் போகிறேன் என்றும், அதனால் சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ளேன் என்றும் லட்சுமி மேனன் கூறியதாக செய்திகள் வெளியாகின!
இது குறித்து லட்சுமிமேனனிடம் கேட்டால், அப்படி நான் எந்த பத்திரிகைக்கும் பேட்டி கொடுத்ததும் இல்லை, அதில் கூறப்பட்டுள்ளது மாதிரி நான் சொன்னதும் இல்லை! என்று மறுக்கிறார். கொம்பன் படத்தில் நடித்து முடித்த கையோடு, ப்ளஸ்-டூ பரீட்சை எழுத வேண்டி இருப்பதால் அதற்கு என்னை தயார் செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு சிறிய இடைவெளியை நானாக ஏற்படுத்திக் கொண்டது உண்மைதான்! தொடர்ந்து படங்களில் நடித்து வந்ததால், பள்ளிக்கு சென்று படிப்பை கவனிக்க முடியவில்லை. அதனால் பரீட்சை நெருங்கும் சமயத்திலாவது நடிப்புக்கு ஒரு பிரேக் கொடுத்து படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். அதனால்தான் வேறு படங்களில் கமிட் ஆகவில்லை! ப்ளஸ்-டூ பரீட்சையில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்பதற்காக சினிமாவில் ஒரு சிறிய இடைவெளி எடுத்துக் கோண்டேன்! ஏப்ரல் 6-ஆம் தேதி வரைக்கும் ப்ளஸ்-டூ பரீட்சை இருக்கிறது. அதை முடித்துக் கொண்டதும் தொடர்ந்து சினிமாவில் நடிக்க இருக்கிறேன். ஒரு சில கதைகளை கேட்டும் வைத்திருக்கிறேன். எல்லாம் ஏப்ரல் 6-ஆம் தேதிக்கு பிறகு முடிவு செய்யலாம் என்று அந்த படங்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் கூறியுள்ளேன்! அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். மற்றபடி எனக்கு கிராமத்து கேரக்டர்களில் நடித்து போரடித்து விட்டது என்றும், அதனால சினிமாவிலிருந்து விலகி படிப்பிலும், இசையிலும் கவனம் செலுத்து போகிறேன் என்று நான் சொன்னதாக வந்த செய்தி உண்மையில்லை! லிட்டரேச்சருக்கு படிக்க வேண்டும் என்பது என் விருப்பம்! அதை நான் நடித்துக் கொண்டே செய்வேன்! அதற்காக சினிமாவை கைவிடும் எண்ணம் எல்லாம் எனக்கு இல்லை! என்றும் விளக்கம் அளித்திருக்கிறார் லட்சுமி மேனன்!