டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கேரளத்தில் இருந்து தற்போது இறக்குமதியாகியிருக்கும் இன்னொரு நடிகை அருந்ததி நாயர். இவர் தற்போது திரைககு வந்துள்ள பொங்கி எழு மனோகரா படத்தில் இரண்டு ஹீரோயினிகளில் ஒருவராக நடித்திருக்கிறார். இதையடுத்தும் இரண்டு படங்களில் கமிட்டாகியிருப்பதாக சொல்லும் அருந்ததி நாயர். இந்த நிலையில், சமீபத்தில் அவரை படங்களுக்கு புக் பண்ணுவதற்காக சில டைரக்டர்கள் கேரளத்தில் இருக்கும் அருந்ததி நாயரை தொடர்பு கொண்டார்களாம். அப்போது, என்னைப்பொறுத்தவரை, சின்ன ஹீரோ பெரிய ஹீரோ என்ற பாகுபாடு எதுவும கிடையாது. எனக்குரிய கேரக்டருக்குத்தான் முதலிடம் கொடுப்பேன்.
அதோடு, நான் சில மாடர்ன் போட்டோக்களை வெளியிடடிருந்தாலும் கிளாமர் விசயத்தில் யாரையும் பின்பற்றோ, ஓவர்டேக் செய்யவோ திட்டமிடவில்லை. கதாபாத்திரங்களுக்கு கிளாமர் அவசியம் என்றால் மிதமான கிளாமரை மட்டுமே வெளிப்படுத்துவேன். காரணம், எனது முகம் ஹோம்லியானது. நான் அளவுக்கதிகமாக கிளாமர் காட்டினால் அது ரசிக்காது. எனது இமேஜ் மட்டுமின்றி, எனது அழகையும் கெடுத்து விடும். அதனால், சினிமாவில் நடிக்கிற காலம்வரை கவர்ச்சியைப்பொறுத்தவரை லிமிட் தாண்டாமல் நடிப்பேன் என்று கூறி விட்டாராம்.