'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
பரதேசியை அடுத்து பாலா இயக்கி வரும் புதிய படம் தாரை தப்பட்டை. இந்த படத்துக்காக சசிகுமார்-வரலட்சுமி ஆகிய இருவரும் 6 மாதங்களாக கரகாட்ட பயிற்சி எடுத்து, கடந்த இரண்டு மாதங்களாக அப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்கள். படத்தின் 90 சதவிகித படப்பிடிப்பும் தஞ்சாவூரில் நடக்கும் நிலையில், இறுதிகட்ட படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், சமீபத்தில் ஒரு நாள் வரலட்சுமி நடித்ததைப்பார்த்து விட்டு, பாலா கண்கலங்கி விட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அது உண்மையில்லையாம். மாறாக, ஒரு காட்சியில் நடித்தபோது வரலட்சுமிதான் கண்கலங்கினாராம். காரணம், அப்படத்தில் நடிக்கும் வரலட்சுமியை ஒரு காட்சியில் வில்லன் கொடுமை செய்வாராம். தடியால் ஆக்ரோசமாக தாக்குவாராம்.
அப்போது ஒரு முறை எதிர்பாராதவிதமாக அவர் தாக்கியது வரலட்சுமியின் தலையிலும், தோளிலும் வேகமாக பட்டு விட்டதாம். இதனால் வலி தாங்க முடியாமல் ஓவென்று கத்தி அழுதுவிட்டாராம் அவர் அழுவதைப்பார்த்து பாலா உள்பட டோட்டல் யூனிட்டும், கலங்கி விட்டதாம். அதன்பிறகு அவரது உடம்பில் வில்லன் தாக்குவது படாமல் கவனமாக படமாக்கினாராம் பாலா.