விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
60 படங்கள் வரை இயக்கிய எஸ்.ஏ.சந்திரசேகர் கடைசியாக தான் இயக்கிய டூரிங் டாக்கீஸ் படத்தில் நாயகனாக நடித்தார். தான் இயக்கும் படங்களில் ஒரு காட்சியில் தலைகாட்டும் எஸ்.ஏ.சி, சட்டம் ஒரு இருட்டரை ரீமேக்கில் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்தார். தற்போது டூரிங் டாக்கீசில் கதையின் நாயகனாக நடித்தார்.
டூரிங் டாக்கீஸ் படத்தை பார்த்த சில இயக்குனர்கள் எஸ.ஏ.சந்திரசேகரை நடிக்க வைக்க ஆர்வம் காட்டுகிறார்களாம். இயக்குனர் ஏ.வெங்கடேஷ் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு ஏற்ற மாதிரி ஒரு கதை சொல்லி ஓகே வாங்கியிருக்கிறார். தற்போது சண்டமாருதம் படத்தின் பணியில் இருக்கும் வெங்கடேஷ் அந்தப் படம் முடிந்ததும் எஸ்.ஏ.சி படத்தை இயக்கலாம் என்று தெரிகிறது.
இதுதவிர விக்னேஷ்-கிருஷ்ணா என்ற இரட்டை இயக்குனர்கள் இயக்கும் வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் எஸ்.ஏ.சி. இது இந்தியில் அமிதாப் பச்சன் நடித்து வெளிவந்த பஹ்பான் என்ற படத்தின் தழுவல் கதை என்று கூறப்படுகிறது.
"டூரிங் டாக்கீஸ்தான் என் கடைசிப் படம் இனி படம் இயக்க மாட்டேன்" என்று அறிவித்துள்ள எஸ்.ஏ.சி "இனி நடிக்க மாட்டேன்" என்று அறிவிக்காதது குறிப்பிடத்தக்கது. எனவே தற்போது எஸ்.ஏ.சி. முழுநேர நடிகராகிவிட்டார். இனி அவரை அடிக்கடி வெள்ளித்திரையில் பார்க்கலாம்.