பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டு காங்கிரசில் இணைந்துள்ள குஷ்பு, வழக்கம்போல் தனது சர்ச்சைகளை தொடங்கி விட்டார். தான் செல்லும் ஒவ்வொரு இடங்களிலுமே அங்குள்ள எதிர்கட்சியினர் மீது குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகிறார். அதனால் காங்கிரஸ் கட்சியினர் எங்கு சென்றாலும் குஷ்புவுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
இந்த நிலையில், மதுரையில் உள்ள உத்தங்குடி பேருந்து நிறுத்தம் அருகே குடியரசு தினததையொட்டி வைக்கப்பட்ட ஒரு பிளக்ஸ் போர்டில் பாரத மாதாவுக்கு பதிலாக குஷ்புவின் படத்தை வைத்து ஒரு பெரும் சர்ச்சையை உண்டு பண்ணியுள்ளனர்.
முதலில் அந்த போர்டில் இடம்பெற்றிருநத இந்திய வரைபடத்திற்குள் சிங்கத்தின் மீது பாரத மாதா தேசிய கொடியை ஏந்தியபடிதான் இருந்ததாம். ஆனால், அந்த பாரத மாதாவின் முகத்தை பின்னர் உற்று நோக்கியபோதுதான் அது குஷ்புவின் முகம் என்பது தெரிய வ்நதிருக்கிறது. ஜனவரி 26-ந்தேதி வைக்கப்பட்ட அந்த பேனரை கடந்த சில தினங்களக்கு முன்புதான் கண்டுபிடித்திருக்கிறார்கள்.