Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சுரேஷ்கோபி கேரளாவில் போட்ட ஊசி மாதிரியே தமிழிலும் போட்ட அதிசயம்..!

02 பிப், 2015 - 10:34 IST
எழுத்தின் அளவு:

சில சமயம் ஒரே மாதிரியான இரு நிகழ்வுகள் ஏதேச்சையாக நடந்து நம்மை ஆச்சர்யத்தில் தள்ளும். மலையாள ஆக்சன் கிங் சுரேஷ்கோபியின் விஷயத்திலும் அதுதான் நடந்திருக்கிறது. சமீபத்தில் வெளியான 'ஐ' படத்தில் இவர் ஒரு டாக்டராக, சைலன்ட் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தில் விக்ரமை பழிவாங்குவதற்காக அவருக்கு நோயை பரப்பும் மருந்தை ஊசி மூலம் செலுத்துவார்.. அதனால் விக்ரமின் முகம் படிப்படியாக மாறி, இறுதியில் அகோரமாகிவிடும். இது சுரேஷ்கோபி, தான் விரும்பிய பெண்ணை, விக்ரம் திருமணம் செய்ய இருப்பது கண்டு, பொறுக்கமாட்டாமல் தனது சுயநலத்திற்காக செய்த வில்லத்தனம்..


கடந்த வருடம் இறுதியில் மலையாளத்தில் வெளியான 'அப்போதிக்கரி' என்கிற படத்திலும் சுரேஷ்கோபி நரம்பியல் டாக்டராக நடித்திருந்தார்.. இதில் நல்ல மருத்துவரான அவரை, அவர் வேலைபார்க்கும் மருத்துவமனை நிர்வாகம் ஸ்டெம் செல் பரிசோதனை முயற்சியை மேற்கொள்ள சொல்லி வற்புறுத்தும்.. அதாவது பிராணிகளின் மீது செய்து பார்க்க்கவேண்டிய சோதனை முயற்சிகளை நோயாளிகளாக வரும் மனிதர்கள் மீது செயல்படுத்தி பார்ப்பது.



குறிப்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கட்டணம் கட்ட முடியாமல் இருக்கும் நோயாளிகளை, அவர்களது கட்டணத்தை தள்ளுபடி செய்வதாக சொல்லிவிட்டு, அவர்களுக்கு தெரியாமல் கையெழுத்தும் வாங்கிவிட்டு, அவர்கள் மீது இந்த ஸ்டெம் செல் பரிசோதனை முயற்சியை மேற்கொள்வார்கள். டாக்டரான சுரேஷ்கோபியும் தனது சூழ்நிலையால் வேறு வழியின்றி இதற்கு உடன்பட்டு நோயாளிகளுக்கு ஊசி போடுவார்..


அந்த மருந்தின் வீரியம் தாங்காமல், ஒவ்வொரு நோயாளிகளுக்கும், முடி உதிர்வது, முகம் மாறுவது, சிரித்தாலோ அழுதாலோ காது வலிப்பது, வெயிலை தாங்கமுடியாமல் போவது, வெளிச்சத்தை பார்க்க அஞ்சுவது என விதவிதமான பக்க விளைவுகள் ஏற்படும்.. ஆக ஹீரோவோ, வில்லனோ இரண்டு கதாபாத்திரங்களிலும் டாக்டராகவே வந்து கிட்டத்தட்ட ஒரேமாதிரியான ஊசியைத்தான் போட்டிருக்கிறார் சுரேஷ்கோபி.. ஏதேச்சையாக நிகழ்ந்தாலும் இது மிகப்பெரிய ஆச்சர்யம் தானே..


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in