வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
சமீபகாலமாக பேய் சம்பந்தப்பட்ட படங்கள் அதிகளவில் உருவாகி வருகின்றன. ஸ்ரீகாந்த் நடித்து வரும் ஓம் சாந்தி ஓம் படமும் ஆவி சம்பந்தப்பட்ட படம் தான். இதனால், இப்படத்துக்கு வணிக ரீதியான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
படத்தில் நாயகன் ஸ்ரீகாந்துடன் நீலம் உபாத்யாயா நாயகியாக நடிக்கிறார். நான் கடவுள் ராஜேந்திரன் ,ஜூனியர் பாலையா, ஆடுகளம் நரேன், மலையாள நடிகர் பைஜூ, வினோதினி வைத்தியநாதன் ஆகியோரும் நடித்துள்ளார்கள். வழக்கமாக கொடூர வில்லனாக மிரட்டும் நான் கடவுள் ராஜேந்திரன், இப்படத்தில் வவ்வால் பாண்டியாக முழுநீள நகைச்சுவை பாத்திரத்தில் கலகலப் பூட்டி கலக்குகிறார். படத்தை இயக்கியுள்ளவர் டி.சூர்யபிரபாகர். இவர் எஸ்.ஜே.சூர்யா, ராஜேஷ்.எம் ஆகியோரிடம் பணிபுரிந்தவர்.
படம் பற்றி 8 பாயிண்ட் எண்டர் டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் பி.அருமைச்சந்திரன் கூறும் போது. " இது ஆவி சம்பந்தப்பட்ட திகில் நகைச்சுவை கலந்த கதைதான்.ஐந்து ஆத்மாக்கள் சம்பந்தப்பட்ட கதை இது . இப்படம் முழுக்க முழுக்க குடும்பத்தினர் குழந்தைகளைக் கவரும்படி இருக்கும். வழக்கமாக தணிக்கைத் துறையினர் திகில் படங்களுக்கு யுஏ சான்றிதழ்தான் கொடுப்பார்கள். இப்படத்துக்கு மட்டும்தான் யு சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்.பேய் ,ஆவி சம்பந்தப்பட்ட படத்தை குழந்தைகளும் ரசிக்கும்படி நகைச்சுவையாக சொல்லியிருக்கிறீர்கள் என்று அவர்களே பாராட்டிச் சொன்னார்கள்..
ஆவி என்றால் பயப்பட வேண்டாம் அது நம் முன்னோர்கள்தான். ஆவிகள் எல்லாம் பாவிகள் அல்ல. அவை நம் முன்னோர்களின் ஆத்மாக்கள்தான். அவை வருவது
பயமுறுத்த அல்ல நம்மை ஆசீர்வதிக்கத்தான் என்கிற புதிய பரிமாணத்தில் படம் உருவாகியுள்ளது. ஆவி பற்றிய அச்சம், நகைச்சுவை இவற்றுடன் கல்வி வியாபாரமாவது, மருந்து கலப்படம் போன்றசமூகக் கருத்தையும் சொல்லியிருக்கிறோம்" என்கிறார் தயாரிப்பாளர்.
திருச்சியில் கதை நடந்தாலும் சிங்கப்பூர், மலேசியாவில் மட்டுமல்ல இந்திய சினிமா வரலாற்றிலேயே முதலில் கம்போடியா அங்கோர்வாட் கோயிலிலும்
படப்பிடிப்பு நடத்தியுள்ளார்கள். ஆவி.பேய் தொடர்பான படக்கதைகள் வழக்கமாக பழையபங்களா காடு, மலை என்று சில குறிப்பிட்ட இடங்களில்தான் சுழலும். இப்படம் மலிவாக சொல்லாமல் பாடல் காட்சிகளுக்கு வெளிநாடுகள் சென்று சுமார் ஒன்றரை கோடி வரை செலவிட்டுள்ளார்கள்.