ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள சினிமாவின் மூத்த இயக்குனர்களில் ஒருவர் தான் சிபி மலயில்.. அதற்காக 1950களை சேர்ந்தவரோ என நினைத்துவிட வேண்டாம்.. மோகன்லால், மம்முட்டியின் சம காலத்தவர் தான். அவர்களை வைத்து பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தவர்தான்.. கடந்த வருடம் இவரது இயக்கத்தில் ஜெயராம் நடித்த 'ஞங்களுடைய வீட்டில் அதிதிகள்' படம் வெளியானது. கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் கழித்து சிபிமலயில்-ஜெயராம் கூட்டணி அமைந்ததால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இந்தப்படத்திற்கு இருந்தது. ஆனால் படம் ஓரளவுக்கு சுமாராகவே போனது..
இவ்வளவு நாட்கள் பொறுமையாக இருந்த இயக்குனர் சிபிமலயில் படத்தின் வெற்றி பாதிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் இணையதளங்களில் படத்தை பற்றி எழுதப்படும் மோசமான விமர்சனங்கள் தான் என கூறியுள்ளார்.. குறிப்பாக டெக்னிகல் விஷயங்களை கூட ரொம்ப தெரிந்தவர்கள் மாதிரி விமர்சிக்கிறார்கள்.. அவைதான் படத்தை பார்க்கும் ஆவல் இருப்பவர்களையும் தியேட்டர்களுக்கு வரவிடாமல் தடுத்துவிடுகிறது. சொல்லப்போனால் ஆன்லைன் விமர்சனங்கள் தான் மலையாள சினிமாவின் வில்லன்” என்றும் கொந்தளித்துள்ளார்