இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
'கத்தி'படத்தைத் தொடந்து விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் 'புலி' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் படத்திற்கு அடுத்து விஜய் நடிக்கப் போகும் அவருடைய 59வது படத்தை 'ராஜாராணி' படத்தை இயக்கி அட்லீ இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படம் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகப் போகும் 50வது படம். இப்படத்திற்கான முன் தயாரிப்பு வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.
அட்லீ, அவர் இயக்கும் இரண்டாவது படத்திலேயே விஜய்யை இயக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். 'நண்பன்' படத்தில் அட்லீ உதவி இயக்குனராகப் பணியாற்றிய போதே, அவரின் சுறுசுறுப்பைப் பார்த்து விஜய் பாராட்டியுள்ளாராம். மிகவும் பிரம்மாண்டமாக உருவாகப் போகும் விஜய் 59 படத்தில், விஜய் ஜோடியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்பது இன்னும் சஸ்பென்சாகவே உள்ளது. அதற்கான தேர்வுகளும் நடந்து வருவதாகத் தெரிகிறது. ஹிந்தித் திரையுலகில் முன்னணி நடிகை யாரைவது நடிக்க வைக்கலாமா என்றும் யோசித்து வருகிறார்களாம். இங்குள்ள சிலரும் விஜய்யுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்கும் எண்ணத்திலும் முயற்சித்து வருகிறார்களாம்.
இந்தப் படம் ஒரு முழுமையான ஆக்ஷன் படம்தானாம். கூடவே, இனிமையான காதலும் உண்டு என்கிறார்கள். 'ராஜாராணி' படத்திலும் 'ஆர்யா - நஸ்ரியா, ஜெய் - நயன்தாரா' ஆகியோருக்கிடையேயான காதல் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த்து என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இப்படம் பற்றிய முறையான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.