இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
டைரக்டர் பாலா இயக்கிய நந்தா படத்தில் லொடுக்கு பாண்டியாக சினிமாவில் அறிமுகமானவர் கருணாஸ். ஆனால், அதறகு முன்பு மேஸ்ட்ரோ என்ற பெயரில் அவர் சென்னையில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். அவரது கச்சேரியில் பாட வந்தவர் கிரேஸ். அவரைத்தான் பின்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டார் கருணாஸ்.
ஆனால் அப்படி அவர் இசை நிகழ்ச்சி நடத்தி வந்தபோது, ரொம்ப கஷ்டப்பட்டு வந்துள்ளார். அதாவது, பிரியாணி சாப்பிட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டால், அந்த சமயத்தில் சென்னை தி.நகரில் நடிகர் விஜயகாந்த் தங்கியிருந்த ரோகிணி லாட்ஜ்க்குதான் செல்வாராம். அங்கு யார் எப்போது சென்றாலும் பிரியாணி சாப்பிடலாம் என்பதால், தான் இருக்கும் ஏரியாவில் இருந்து சைக்கிளில் சென்று வயிறார சாப்பிட்டு விட்டு திரும்புவாராம்.
இதை சகாப்தம் ஆடியோ விழாவில் தெரிவித்த கருணாஸ். எப்போது நான் பிரியாணி சாப்பிட்டாலும் கேப்டன் கொடுத்த அந்த பிரியாணியைதான் நினைத்துக்கொள்வேன். அந்த வகையில், சில நன்றி கெட்ட காமெடி நடிகர்களைப்போன்று இல்லாமல் என்றென்றைக்கும் நான் கேப்டனுக்கு நன்றியுள்ள காமெடியனாக இருப்பேன் என்று வடிவேலுவை மனதில் கொண்டு பேசினார் கருணாஸ்.