இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் சகாப்தம். கேப்டன் சினி கிரியேசன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை சுரேந்தர் இயக்கியுள்ளார் கார்த்திக்ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த விழாவில், சிவகுமார், பிரபு, நெப்போலியன், பார்த்திபன், எஸ்.ஏ.சந்திரசேகரன், கே.எஸ்.ரவிக்குமார்,. கஸ்தூரிராஜா, வாகை சந்திரசேகர், கங்கை அமரன், பாண்டியராஜன், பி.வாசு, ஆர்.கே.செல்வமணி, சுந்தர்.சி, நாசர், ஜெயம்ரவி, சிபிராஜ், விமல், கருணாஸ், சீனிவாசன், தேவயானி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சண்முகப்பாண்டியனை வாழ்த்தி பேசினார்கள்.
விழாவில் விஜயகாந்த் பேசுகையில், நான் அரசியலுக்கு சென்றபிறகு எந்த சினிமா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டதில்லை. இது என் மகன் நடித்த படம் என்பதால் கலந்து கொண்டுள்ளேன். மற்றவர்களின் பட விழாக்களுக்கு நான் செல்லாததற்கு காரணம், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அந்த படஙகளுக்கு மற்றவர்கள் தேவையில்லாத தொல்லை கொடுப்பார்கள். என்னால் மற்றவர்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்படக்கூடாது என்று நான் நினைப்பதினால்தான் சினிமா நிகழ்ச்சிகளை தவிர்க்கிறேன்.
மேலும், சகாப்தம் படத்தில் என் தலையீடு இருந்ததாக செய்திகள் வந்தன. ஆனால், அந்த படத்தைப்பொறுத்தவரை கதை கேட்டதில் இருந்து கதாநாயகி செலக்ட் பண்ணியது வரை எல்லாமே என் மனைவியும், மைத்துனரும்தான். என்னிடம் கதையைப்பற்றி சொன்னபோதுகூட, நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். எனக்கு அரசியல் வேலைகள் இருக்கிறது என்று நான் விலகிக்கொண்டேன். அதேசமயம், என் மகனின் நடிப்பு பற்றியும், அவர் என்னைப்போலவே அதிகாலை 6.45 மணிக்கே ஸ்பாட்டுக்கு வந்து விடுகிறார் என்று மற்றவர்கள் சொல்லக்கேட்டேன். அது எனக்கு பெருமையாக இருந்தது.
காரணம். என்னைப்பொறுததவரை தெய்வம் எல்லாம் அப்பாற்பட்டது. செய்யும் தொழில்தான் தெய்வம என்று நினைப்பேன். அதை சரியாக செய்ய வேண்டும் என்பதற்காக உழைப்பேன். அந்த வகையில் என் மகன் செய்யும் தொழிலை மதித்தால் மகிழ்ச்சியடைவேன். மேலும், என் மகனை வாழ்த்தியவர்கள் என்னைப்போலவே அவனையும் வர வேண்டும் என்றார்கள்.
ஆனால், நான் என் மகனிடம் இப்படித்தான நடிக்க வேண்டும. என்னை பின்பற்ற வேண்டும் என்று எந்த அறிவுரைகளையும் சொன்னதில்லை. உன் விருப்பம் எப்படியோ அப்படியே நடி என்றுதான் சொல்லியிருக்கிறேன். அதோடு, இன்றைய காலகட்டத்து பசங்களுக்கு நாம் எதுவும் சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. அவர்களுக்கே தெரியும்.
மேலும், அவர் என்னை மாதிரி வருவாரா? இல்லை வேறு மாதிரி நடிகராக வருவாரா? என்று எதையும் நாம் இப்போதே தீர்மானிக்கவும் முடியாது. அது அவரை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்கிறார்களோ அதைப்பொறுத்தது. இத்றகெல்லாம் மேலாக தலையெழுத்து என்று ஒன்று இருக்கிறது.. அது எப்படியோ அப்படித்தான் வாழ்க்கை அமையும்.