ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் |
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் நடிகைகளான திலீப்-மஞ்சுவாரியர் இருவரும் 15 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு 13 வயதில் ஒரு மகளும் இருக்கிறாள். இந்த நிலையில், கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். பிறகு விவாகரத்து கேட்டு கோர்ட் படியும் ஏறினர். இந்த வழக்கு எர்ணாகுளம் குடும்பநல கோர்ட்டில் நடந்து வந்தது.
கடந்த 6 மாதங்களாக நடந்து வந்த இந்த வழக்கில், நேற்று விசாரணைக்கு வந்தபோது இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்தனர். இந்நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி இருவருக்கும் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டார். மேலும் இவர்களது குழந்தை மீனாட்சி, திலீப்புடன் இருக்கும் என்றும், தேவைப்படும் போது மஞ்சு வாரியர், தனது குழந்தையை பார்க்கலாம் என்றும் உத்தரவிடப்பட்டது.