விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
சினிமாவில் இத்தனை வருடங்களில் நான் சேர்த்த மிகப்பெரிய சொத்து ரசிகர்களாகிய நீங்கள் தான் என்று கூறியுள்ளார் நடிகர் விஜய். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்த கத்த படம் கடந்த தீபாவளியன்று வௌியானது. கடந்தாண்டு வௌியான படங்களில் ரூ.100 கோடி வசூலை தொட்ட படம் விஜய்யின் கத்தி. இப்படம் ரூ.100 கோடியை வசூலித்ததோடு மட்டுமில்லாமல் 100 நாட்களையும் கடந்துள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர். இந்நிலையில் கத்தின படத்தின் 100 நாட்கள் வெற்றியை பற்றி எதுவும் பேசாமல் இருந்த விஜய் இப்போது வாய் திறந்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, கத்தி படத்தை மிகப்பெரிய வெற்றி படமாக ஆக்கியதற்கு ரசிகர்களுக்கு நன்றி. ரசிகர்கள் என் மீது காட்டும் அன்புக்கு வெறும் நன்றி என்று ஒருவார்த்தையில் கூறிவிட முடியாது. இத்தனை வருடங்களில் நான் சேர்த்த மிகப்பெரிய சொத்து ரசிகர்களாகிய நீங்களும், உங்களது அன்பும் தான் என்று கூறியுள்ளார் விஜய்.