ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ராயல் ஸ்கிரீன்ஸ் சார்பில் பரமராஜ் தயாரித்துள்ள படம் தொப்பி. இந்த படத்தை மதுரை சம்பவம், சிவப்பு எனக்கு பிடிக்கும் படங்களை இயக்கிய யுரேகா இயக்கியுள்ளார். முரளிராம்-ரக்ஷா, ஜி.எம்.குமார், அருள்தாஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மதியம் 12 மணி அளவில் சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், டைரக்டர்கள் ஜி.என்.ரங்கராஜன், எஸ்.பி.முத்துராமன், கே.பாக்யராஜ், நடிகர்கள் விஜயசேதுபதி, விமல், சிஙகம்புலி, பவர்ஸ்டார் சீனிவாசன், தேனப்பன், அம்மா கிரியேசன்ஸ் சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பவர்ஸ்டார் பேசியபோது, நான்தான் பலருக்கு செக் மோசடி செய்திருக்கிறேன். ஆனால் இந்த சினிமாவில் எனக்கே செக் மோசடி செய்கிறார்கள். படப்பிடிப்புக்கு அழைத்து சென்று ரோப்பில் தொங்க விட்டு நடிக்க வைக்கிறர்கள். நானும் வியர்வை சிந்தி கடினமாக உழைக்கிறேன். ஆனால் நடித்து முடித்ததும் ஒரு செக் தருகிறார்கள. அதை வங்கியில் போட்டால் ரிட்டனாகி விடுகிறது. ஆக, செக் மோசடியான எனக்கே மோசடி செய்கிறார்கள். நான் பலரது தலையில் தொப்பி வைத்திருக்கிறேன். ஆனால் இப்போது நானே திருந்தலாம் என்று நினைத்தாலும் என்னை திருந்த விட மாட்டார்கள் போலிருக்கு. நானெல்லாம் பதிலுக்கு தொப்பி வைக்க நினைத்தால் யாருமே தாங்க மாட்டார்கள் என்று கிண்டலாக பேசினார்.
அதையடுத்து, சினிமாவில் படம் தயாரிக்க வருபவர்களை முதலில் மொத்த பணத்தையும் வங்கியில் போடச்சொல்லி அதன்பிறகு படப்பிடிப்பை நடத்த அனுமதி கொடுங்கள் என்று தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த தேனப்பன், சிவா ஆகியோருக்கு வேண்டுகோள் வைத்தார் பவர்ஸ்டார். ஆக, மொத்தம் பணம் இருந்தால் மட்டுமே சினிமாவில் எதையும் சாதிக்க முடியும். திறமை, நம்பிக்கை எல்லாமே வேஸ்ட் என்பது போல் அவரது பேச்சு இருந்தது.
இதைக்கேட்ட டைரக்டரும், நடிகருமான சிங்கம்புலி கொதித்தெழுந்து விட்டார். அதையடுத்து பேச வந்த அவர், இந்த சினிமாவில் வெறும் பணத்தை மட்டுமே வைத்து யாருமே சாதிக்க முடியாது. இங்கே நம்பிககை, உழைப்பை மட்டுமே கொண்டு வந்து உயர்ந்தவர்கள்தான் இருக்கிறார்கள. வெறும் பணத்தை மட்டுமே வைத்து யாருமே சாதித்ததில்லை. சாதிக்கவும் முடியாது என்று உருக்கமாக பேசினார்.
ஆனால், அதையடுத்து பேசிய அம்மா கிரியேசன்ஸ் சிவா, இன்றைக்கு படம் தயாரிப்பவர்கள் ஒவ்வொருவரும் படத்தை எடுத்து முடிப்பதோடு அதை தியேட்டருக்கு கொண்டு வருவதற்கு ரொம்ப கஷ்டப்படுகிறார்கள். ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு முடிந்ததும் அனைவருக்கும் சம்பளம் கொடுப்பதற்கு அவர் எங்கெங்கெல்லாம் இருந்து வட்டிக்கு கடன் வாங்கி வருகிறார்கள் என்பது படம் தயாரித்தவர்களுக்குத்தான் தெரியும். ஒவ்வொரு தயாரிப்பாளர்களும் ரத்தக்கண்ணீர் வடிக்கிறார்கள். படப்பிடிப்பு முடிந்ததும் அனைவரும் போய் விடுவார்கள். அனால் தயாரிப்பாளர் அநத படத்தை வெளியிட அடுத்து போராடுகிறார். படம் வெளியாகி ஓடினால்தான் அவர் செலவு செய்த பணம் கைக்கு வரும்.
இன்றைக்கு சினிமாவில் டாக்டர் சீனிவாசன் பவர்ஸ்டார் என்று ஆகியிருக்கிறார் என்றால் அதற்கு தயாரிப்பாளர்கள்தான் காரணம். தனது வளர்ச்சிக்கு காரணமானவர்களை மறந்து விட்டு இந்த பவர்ஸ்டார் இதுபோன்று தயாரிப்பாளர்களை மட்டம் தட்டி பேசுவதை இந்த மேடையோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அவருக்கு பகிரங்கமாக எச்சரிக்கை தெரிவிக்கும் வகையில் பேசினார். அதையடுத்து கப்சிப்பாகி விட்டார் பவர்ஸ்டார்.