ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மூடர்கூடம் படத்தில் ஹீரோவாக நடித்த ராஜாஜ் தற்போது ஹீரோவாக நடித்துள்ள படம் சதுரன். இந்த படத்தை சுரேஷ்கிருஷ்ணாவிடம் வீரா, பாட்ஷா, பாபா வரை கோ-டைரக்டராக பணியாற்றிய கே.ராஜீவ் பிரசாத் இயக்கியுள்ளார். மோனிக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு மகான் கணக்கு படத்திற்கு இசையமைத்த ஏ.கே.ரிஷால்சாய் இசையமைத்துள்ளார். யுகபாரதி, முத்தமிழ் பாடல்கள் எழுதியுள்ளனர். ராதா கிருஷ்ணா வசனம் எழுதியுள்ளார். இவர் விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள படத்துக்கு டயலாக் எழுதியவர்.
இப்படம் பற்றி இயக்குனர் கே.ராஜீவ் பிரசாத் கூறுகையில், எனது முதல் படத்தை கன்னடத்தில் கெளதம் என்ற பெயரில் பிரேம் என்பவரை வைத்து இயக்கினேன். அந்த படத்தை முடித்த பிறகு தமிழில் ஒரு சரியான ஓப்பனிங்கிற்காக வெயிட் பண்ணியபோதுதான், சதுரன் என்ற இந்த படத்தை இயககும் வாய்ப்பு கிடைத்தது. சதுரன் என்றால், ஸ்மார்ட், இன்டலிஜென்ட், நகரவாசி என பல மீனிங் உள்ளது. இந்த படத்தில் மூடர் கூடத்தில் ஹீரோவாக நடித்த ராஜாஜ் நடித்துள்ளார். ஹீரோயினாக வர்ஷா என்ற பெங்களூர் பெண் நடித்துள்ளார். முண்டாசுப்பட்டியில் நடித்த காளி ஒரு முககிய வேடத்தில் நடிக்கிறார். இது ஒரு ஆட்டோ டிரைவரின் வாழ்க்கையில் ஒரே நாள் இரவில் நடக்கும் சம்பவம். ஆட்டோ டிரைவரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவமாகவும், சமுதாயத்தில் நடக்கிற விசயமாகவும் இருக்கும். இது சமுதாயத்தில் நடந்துக்கிட்டிருக்கிற ஒரு விஷயம்தான். இன்றைக்கு மாறி வரும் காலத்திற்கேற்ப மாறி வரும் ஒரு ஆட்டோ டிரைவரைப்பற்றிய கதைதான் இந்த சதுரன்.
இன்றைய ஆட்டோ டிரைவர்களில் சட்டத்திட்டங்களை சரியாக பின்பற்றுகிறவர்களும இருக்கிறார்கள். சூழ்நிலைக்கேற்ப மாறிக்கொள்ளக்கூடிய வர்களும் இருக்கிறார்கள். அவர்களில் நியாயமாக இருககும் ஒரு ஆட்டோ டிரைவர்தான் இந்த படத்தின் ஹீரோ. ஒரு சிக்கலில் தன்னை அறியாமல் சிக்கிக்கொள்ளும் அவன் அதிலிருநது எப்படி மீண்டு வருகிறான் என்பதுதான் இப்படத்தின் கதை.
இது சீரியஸ் கதை என்றபோதும், காதல், காமெடி என எல்லாம் கலந்து கமர்சியல் படமாகத்தான் இயக்கியிருக்கிறேன். ஓப்பனிங்கில் மட்டும் லவ் போர்ஷன் இருக்கும் அதன்பிறகு முக்கிய பிரச்சினைக்கு வருகிறேன். ஒரு இரவுக்குள் நடக்கும் இந்த கதையில் நிறைய சேஸிங் இடம்பெற்றுள்ளது. ஹீரோவின் ப்ரண்டாக நடித்துள்ள காளிக்கும் கதையில் நல்ல டிராவல் உள்ளது. அவரை சுற்றியும் ஒரு முக்கிய ட்ராக் செல்கிறது. லவ் டூயட் மற்றும் பக்கா மாஸ் பாடல் ஒனறை கானா பாலா பாடியிருக்கிறார்.
மேலும், இன்றைக்கு தெருக்கூத்து என்பது காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. அதேசமயம் சில கிராமப்புறங்களில் மட்டுமே நடந்து கொண்டிருககிறது. சிட்டியைப் பொறுத்தவரைக்கும் அப்படியொரு கலை இருப்பதே மக்களுக்கு தெரியாமல் போய் விட்டது. அதனால் ஒரு தெருக்கூத்து கலைஞனின் வேதனையும சொல்லும் வகையிலும் ஒரு ட்ராக் செல்கிறது. அந்த ரோலில் பரிட்சயமான நடிகர்கள் நடித்தால் யதார்த்தம் இருக்காது என்பதால், காஞ்சிபுரத்தைச்சேர்ந்த சண்முகம் என்ற ஒரு தெருக்கூத்து கலைஞரையே நடிக்க வைத்திருக்கிறேன்.