வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
கோடம்பாக்கம் சினிமாவில் குறிப்பிடக்கூடிய இயக்குனர்களில் ஒருவர் எஸ்.ஜே. சூர்யா. இவர் இயக்கும் ஒவ்வொரு படமும் ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கி பிறகு திரைக்கு வரும். அந்த வகையில் தானே இசையமைத்து நடித்து இயக்கி உள்ள படம் இசை. இப்படம் 30.01.2015 அன்று திரைக்கு வர ரெடியாக இருந்தது. படத்துக்கான விளம்பரங்களும் படு விமரிசையாக செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் வழக்கம் போல இசை படத்துக்கும் சிக்கல் வந்து படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகவில்லை. இதனால் அப்செட்டாகி இருப்பது சூர்யா தரப்பு மட்டுமல்ல திரையரங்கு உரிமையாளர்களும் தான் என்ன பிரச்சனை என்றால், கியூப் முறையில் படம் உருவாகி உள்ளது. அதனால் கியூப்க்கு கட்ட வேண்டிய ரூ.5 லட்சம் பணத்தை சூர்யா தரப்பு தரவில்லையாம். இதனால் கியூப்காரார்கள் பணத்தை கட்டிவிட்டு படத்தை எடுத்து கொள்ளுங்கள் என்று கறாராக கூறிவிட்டனர். இதனால் இசை திரைக்கு வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இச்செய்தி கேட்டு புதிதாக பொறுப்பேற்றுள்ள தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பஞ்சாயத்து செய்து வருகிறார்கள்.