வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பிருத்விராஜும், இந்திரஜித்தும் சகோதரர்கள் என்பதும் தனித்தனி ஹீரோக்களாக படங்களில் நடித்து வருகிறார்கள் என்பதும் தெரிந்த விஷயம் தான். அதேசமயம் நல்ல ஸ்கிரிப்ட் கிடைக்கும்போது இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடிக்கவும் தயங்குவதில்லை. இதுவரை அப்படி பத்து படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள்.. பத்தாவது படம் தான் ஆர்யா, பிருத்விராஜ், இந்திரஜித் கூட்டணியில் உருவாகி வரும் 'டபுள் பேரல்'.
ஆனால் பதினொன்றாவது முறையாக இருவரும் 'அமர் அக்பர் ஆண்டனி' என்கிற படத்தில், அமர், அக்பராக இணைந்து நடிக்க இருக்கிறார்கள்.. மூன்றாவது ஆண்டனி கேரக்டரில் ஜெயசூர்யா நடிக்கிறார். 'கிளாஸ்மேட்ஸ்' படத்தை தொடர்ந்து ஒன்பது வருடம் கழித்து இவர்கள் மூவரும் இணைந்து நடிக்கும் படம் இது. பாடகர், சின்னத்திரை நடிகர், காமெடி நடிகர் என பல அடையாளங்களுடன் வலம் வரும் நடிகர் நாதிர்ஷா இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக மாறுகிறார்.. கதாநாயாகியாக வேதிகா நடிக்க இருக்கிறார். ஏப்ரலில் படப்பிடிப்பை துவங்க இருக்கிறார்கள்.