ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள திரையுலகில் நாற்பது வருட வெற்றி வரலாறு கொண்டவர் இயக்குனர் ஐ.வி.சசி. நடிகை சீமாவின் கணவரான இவர் கமலை வைத்து 'குரு', ரஜினியை வைத்து 'காளி', 'எல்லாம் உன் கைராசி' ஆகிய படங்களை தமிழிலும் இயக்கியுள்ளார்.. ஏன் கமலை வைத்து இந்தியிலும் ஒரு படத்தை இயக்கியுள்ளார். ஆனால் மலையாளத்திலோ இவரது பேவரைட் மம்முட்டிதான்.. கிட்டத்தட்ட எஸ்.பி.முத்துராமன் - ரஜினி கூட்டணி மாதிரி.. அதேசமயம் மோகன்லாலை வைத்தும் சில படங்களை இயக்கியுள்ளார்.
அதாவது மம்முட்டியை வைத்து ஐந்து படங்களை இயக்கினால் மோகன்லாலை வைத்து ஒரு படம் இயக்குவார். ஆனாலும் மோகன்லாலுக்கு 'அனுராகி', 'தேவாசுரம்' என ஹிட்டுக்களையும் கொடுக்க தவறவில்லை. கடைசியாக மோகன்லாலை வைத்து 2000-ல் 'ஷ்ரதா' என்ற படத்தை இயக்கினார் ஐ.வி.சசி. இப்போது வனவாசம் முடிந்தது போல் பதினான்கு வருடங்கள் கழித்து மீண்டும் மோகன்லாலை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார் ஐ.வி.சசி. தனது 66 வயதில் கிட்டத்தட்ட 13௦ படங்களை இயக்கியுள்ள இவர், கடந்த ஐந்து வருடங்களாக படம் எதுவும் இயக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.