சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
சமீபகாலமாக சின்னத்திரையில் முகம் காட்டி புகழ் பெற்றவர்கள் சினிமாத்துறைக்குள் என்ட்ரி கொடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் சிவகார்த்திகேயன், மா.கா.பா.வின் வரவுக்கு பிறகு சில பெண் நிகழ்ச்சி தொகுப்பாளினிகளும் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு தேடி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது, தனியார் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினிகளில் ஒருவரான அனுஷ்யாவும் சினிமாவில் என்டரி கொடுக்கிறார். ஆனால் இவருக்கு ஹீரோயினியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லையாம். வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்கவே ஆசைப்படுகிறார். காரணம் கேட்டால், கதாநாயகி என்று இறங்கி விட்டால் கதைக்கு தேவை என்று கவர்ச்சியாக நடிக்க சொல்வார்கள். ஆனால் நமக்கு அது சரிப்பட்டு வராது.
அதனால்தான் நடிக்க சில வாய்ப்புகள் வந்தபோதே, கேரக்டர் ரோல்களில் மட்டும்தான் நடிப்பேன் என்று சொல்லி விட்டேன. மேலும், கதாநாயகி என்றால் சில வருடஙக்ள் தான் நீடிக்க முடியும். ஆனால், ஆனால் எனக்கு இந்த கலைத்துறையில் நீண்டகாலம் இருக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதனால்தான் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக நடிப்பதுதான் சரியான வழி என்று முடிவெடுத்திருக்கிறேன் என்று கூறும் அனுஷ்கா, தற்போது என் கைவசம் இரண்டு புதிய படங்கள் உள்ளது. மேலும், சினிமாவில் பிசியாகும் வரை சினிமா, சின்னத்திரை என இரணடு துறைகளிலும் கவனம் செலுத்தவும் திட்டமிட்டுள்ளேன் என்கிறார் அனுஷ்யா.