பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
சினிமாக்காரர்களை நேரடியாகவே கிண்டல் செய்து வருபவர் கவுண்டமணி. தானும் ஒரு சினிமாக்காரர் என்றபோதும் அதைப்பற்றி கவலைப்பட மாட்டார். அதேசமயம், தான் சினிமாக்காரன் என்கிற பந்தாக்களை அவர் செய்ய மாட்டார். நடிப்பு எனது வேலை. அதற்கான கூலியை வாங்கிக்கொண்டு நடிக்கிறேன் அவ்வளவுதான். இது என்ன பெரிய சாதனையா என்று யதார்த்தமாக பேசக்கூடியவர்.
அப்படிப்பட்ட கவுண்டமணி, சில ஆண்டுகள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தவர், தற்போது ரீ-என்ட்ரியில் வாய்மை, 49 ஓ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் 49 ஓ படத்தில் அவரே ஹீரோவாக நடிக்கிறார். வாய்மை படத்தில் ஒரு டாக்டர் கேரக்டர் என்றபோதும் அவருக்கு பாடல்கூட உள்ளதாம்.