'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்கு சினிமா மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவையே தன் பக்கம் திருப்பியவர் சம்பூர்ணேஷ் பாபு. சமீபத்தில் இவர் நடித்த படத்திலிருந்து சில காட்சிகள் வாட்ஸ்ஆப் மூலமாக வைரலாக பரவியது. யாருடா இது நம்ம பவர் ஸ்டாரையே மெண்ணு திண்ணுட்டானே என்று வாயை பிளந்து அந்த வீடியோவை பார்த்தது தமிழ் திரையுலகம். ஆனால் அதுவே தற்போது இவருக்கு சாதகமாக அமைந்துள்ளது.
ஐ படத்திற்கு பிறகு விக்ரம் நடிக்கும் படம் 10 எண்றதுக்குள்ள, த்ரில்லர் கலந்த ஒரு டிராவல் கதையான இந்த படத்தை இயக்கிக் கொண்டிருப்பவர் கோலி சோடா புகழ் விஜய்மில்டன். இந்த படத்தில் தான் சம்பூர்ணேஷ் பாபு காமெடியனாக நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் இந்த படத்தில் பாலிவுட் ஸ்டார் ஜாக்கி ஷெராஃப் நடிக்கிறார்.
ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் இப்படத்தின் விநியோக உரிமையை படம் முடிவதற்கு முன்பே ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் வாங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படத்தை ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்ய முடிவெடுத்திருக்கிறார்களாம். தெலுங்கு பதிப்பிற்கான படப்பிடிப்பை பிப்ரவரியில் தொடங்கவிருக்கிறார்களாம். ஏப்ரலில் இந்த படம் திரைக்கு வந்துவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படி ஒரு பெரிய ஹிரோ, பெரிய நிறுவனத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து நிச்சயமாக சம்பூர்ணேஷ்க்கு எங்கேயோ மச்சம் இருக்கு என்பதை நிரூபித்துவிட்டது.