‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
எந்த நேரத்தில் தேசிய விளையாட்டு போட்டிகளின் துவக்க விழாவில் தனது 'லாலிசம்' இசைக்குழுவின் இசை நிகழ்ச்சியை நடத்த மோகன்லால் முடிவு செய்தாரோ, அப்போதிருந்து அவர்மீது தேவையில்லாத வீண்பழிகள் குத்திக்கிழிக்கும் அம்புகளாய் பாய்ந்து கொண்டிருக்கின்றன. இந்த இசை நிகழ்ச்சிக்காக அவர் கேரள அரசிடம் இரண்டு கோடி ரூபாய் கேட்டார் என்று பரவிய செய்திதான் பிரச்னையின் ஆணிவேர்.. மலையாள இயக்குனர் வினயன் கூட, தான் ஏதோ ஒரு மேதாவி போல, உண்மை எதுவென அறிந்துகொள்ளாமல் மோகன்லாலை விமர்சித்திருக்கிறார்.
ஆனால் இந்த இசைக்குழுவின் பிரதான இசையமைப்பாளரான ரதீஷ் வேகா இது பற்றி கூறும்போது, “மோகன்லால் இசைக்குழுவை ஆரம்பித்ததும், தேசிய விளையாட்டு போட்டிகளின் துவக்கவிழாவின்போது இசை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்ததும், அவரது ஆத்மார்த்தமான இசை ஆர்வத்தினால் தான்.. இந்த நிகழ்ச்சிக்காக செலவிடும் நேரத்தில், அவர் இந்த இரண்டுகோடி ரூபாயை, ஒரு படத்தில் நடித்து சம்பாதித்து விடுவார். அப்படியிருக்க தேவையில்லாமல் அவர்மீது இரண்டுகோடி ரூபாய் கேட்டார் என அபாண்டமாக வீண்பழி சுமத்துவது அர்த்தமற்றது” என கொதித்திருக்கிறார்.