Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

“சிரஞ்சீவியின் 150வது படத்தை அவரே இயக்கவேண்டும்” - சொல்கிறார் ராம்கோபால் வர்மா..!

29 ஜன, 2015 - 17:30 IST
எழுத்தின் அளவு:

சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாதவர் இயக்குனர் ராம்கோபால் வர்மா. என்ன பேசுகிறோம் என தெரிந்தே, எகிடு தகிடாக எதையாவது பேசி, வான்ட்டடாக வம்பை விலைகொடுத்து வாங்குவதில் இவரை அடித்துக்கொள்ள ஆளில்லை. அப்படித்தான் இப்போது டோலிவுட் மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு யோசனை சொகிறேன் என, அவர் ஆரம்பித்த பிரஜா ராஜ்ஜியம் கட்சியைப்பற்றி தேவையில்லாமல் வாயை கொடுத்துள்ளார்..


சிரஞ்சீவி தற்போது தனது 150வது படத்திற்கான கதையையும் அதை இயக்கப்போகும் இயக்குனரையும் வலைவீசி தேடிக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் தான் “சிரஞ்சீவியின் 150வது படத்தை மற்ற இயக்குனர்களிடம் ஒப்படைப்பதைவிட அவரே இயக்குவது தான் சிறந்ததாக இருக்கும்.. சிரஞ்சீவி சினிமாவின் அனைத்து துறைகள் பற்றியும் கரைத்து குடித்தவர். அதனால் அவரே படத்தை இயக்க தகுதியானவர்தான்” என்று கூறியுள்ளார் ராம்கோபால் வர்மா.


அதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. “அப்படி சிரஞ்சீவி அவரது படத்தை இயக்கினால் அது நிச்சயம் அவரது முந்தைய கண்டுபிடிப்பான பிரஜா ராஜ்ஜியம் கட்சியை விட மோசமாக இருந்துவிடாது என்று நம்பலாம்” என ஒரு எக்ஸ்ட்ரா பிட்டையும் டிவிட்டரில் போட இப்போது சிரஞ்சீவியின் ரசிகர்களின் அக்னிப்பார்வைக்கு இலக்காகியிருக்கிறார் ராம்கோபால் வர்மா.. ஒருவேளை, தமிழகத்தில் அரசியல் கட்சி ஆரம்பித்தபின் படத்தில் நடிப்பதை விட்டுவிட்ட விஜயகாந்த், கொஞ்சநாள் கழித்து அவர் நடித்த படமான 'விருதகிரி'யை அவரே இயக்கிய சம்பவத்தை தான் தனது யோசனையாக சொல்லியிருப்பாரோ ராம்கோபால் வர்மா..?


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in