ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகை நயன்தாரா டாஸ்மாக்கில் பீர் வாங்குவது போன்ற வீடியோ காட்சி இணைய தளத்தில் வெளியானது. அது வைரலாக பரவியது. நயன்தாரா மதுக்கடையில் சென்று பீர்வாங்கும் காட்சியை கண்டித்து சில அமைப்புகள் அறிக்கை வெளியிட்டது. போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தது.
இந்த நிலையில் இதுகுறித்து நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நான் மதுக்கடைக்கு சென்று பீர் வாங்குவது போன்ற காட்சி ஒரு சினிமாவுக்காக எடுக்கப்பட்ட காட்சி. பாண்டிச்சேரியில் மக்கள் நெருக்கம் மிகுந்த ஒரு கடையில் இந்த காட்சி எடுக்கப்பட்டது. நான் என்னை பற்றி வரும் எந்த கிசுகிசுவிற்கும் விளக்கம் தருவதில்லை. ஆனால் நான் நடித்த ஒரு சினிமா காட்சியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்து பிரச்னையை தூண்டிவிடுகிற மாதிரி ஊதி பெரிதாக்குவதை கண்டிக்கிறேன். இது சிறுபிள்ளைத்தனமானது.
பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ஒரு கடையில் நான் போய் மது வாங்க முடியுமா? இதை ஏன் யாரும் யோசிக்க வில்லை. எனவே சினிமாவுக்காக எடுக்கப்பட்ட அந்த காட்சியை யாரும் உண்மை என்று நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு நயன்தாரா அறிக்கையில் கூறியுள்ளார்.