தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கஜினி பட வெற்றிக்கு பிறகு சுமார் 2 ஆண்டுகள் கழித்து தற்போது இந்திப் படம் எடுக்கும் வேலையில் இறங்கி உள்ளார் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ். இது இவர் இயக்கும் இரண்டாவது இந்திப் படம் ஆகும். இந்த படத்தில் அக்ஷை குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அவருடன் விபுல் ஷாவும் நடிக்க உள்ளார். விபுல் ஷா, தற்போது ஜான் ஆப்ரகாமை வைத்து ஒரு படம் தயாரித்து கொண்டிருக்கிறார். இது காக்க காக்க படத்தின் இந்தி பதிப்பாகும். தற்போது முருகதாஸ் இயக்க உள்ள இந்திப் படத்தையும் விபுல் ஷா தான் தயாரிக்க உள்ளார். ஸ்ருதிஹாசனை வைத்து முருகதாஸ் தற்போது இயக்கி வரும் தமிழ்ப் படத்தின் வேலைகள் முடிவடைந்ததும், தனது இந்தி பட வேலைகளில் இறங்க முருகதாஸ் திட்டமிட்டுள்ளார்.