இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
ஷங்கர் இயக்கத்தில், விக்ரம், எமி ஜாக்சன் நடித்த ஐ திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியான அதே நாளில் ஆந்திராவிலும், கேரளாவிலும் வெளியானது. அனைத்து ஏரியாக்களிலும் ஐ படத்துக்கு அமோக ஆதரவு கிடைத்திருக்கிறது என்றாலும், தமிழ்நாடு ஆந்திராவைவிட கேரளாவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.
கடந்த 14-ஆம் தேதி கேரளா முழுக்க வெளியான ஐ படம் இன்று வரை ஹவுஸ்புல்தான்! திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தியேட்டரில் ஐ படம் வெளியான அன்று பெரும் கூட்டம் கூடியிருக்கிறது. கூட்டத்தினரை கட்டுப்படுத்தும் பணியில் தியேட்டர் காவலாளி ஸ்ரீகுமார் என்பவர் ஈடுபட்டிருந்தபோது, நெரிசலில் சிக்கி கீழே விழுந்திருக்கிறார். கூட்டம் அவரை மிதித்ததில் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அவரது மொத்த உடம்பே செயலிழந்துபோய்விட்டதாம். தீவிர சிகிச்சை பிரிவில் அவர் இன்னமும் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட நடிகர் சுரேஷ் கோபி காவலாளி ஸ்ரீகுமாருக்கு 1 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார். அதோடு, இந்த தகவலை படத்தின் ஹீரோ விக்ரம், மற்றும் இயக்குநர் ஷங்கருக்கும் தெரிவித்த சுரேஷ் கோபி, அவர்களையும் ஸ்ரீகுமாருக்கு உதவி செய்யும்படி வற்புறுத்தி இருக்கிறார். சுரேஷ்கோபியின் பேச்சை தட்டமுடியாமல், நிச்சயம் உதவி செய்வதாக கூறியிருக்கிறார்களாம் ஷங்கரும், விக்ரமும்.