டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கூத்துப்பட்டறையில் கணக்காளராக வேலை செய்து வந்தபோது, எதிர்பாராதவிதமாக ஒரு குறும் படத்தில் நடித்தவர் விஜய்சேதுபதி அந்த தொடரில் அவரது நடிப்பு பிரமாதமாக இருந்ததாக சுற்றி நின்றவர்கள் அவரை உற்சாகப்படுத்தி விட, பின்னர் பல குறும் படங்களில் நடித்து இன்றைக்கு கோடம்பாக்கத்தின் முக்கிய ஹீரோக்களில் தானும் ஒருவராகி விட்டார்.
அதனால், ஆரம்பத்தில் தன்னை வைத்து குறும்படங்களை இயக்கியவர்களுக்கே கால்சீட் கொடுத்து நடித்து வந்த அவர், இப்போது முன்னணி டைரக்டர்களின் படங்களிலும் நடிக்கத் தொடங்கியுள்ளார். முக்கியமாக, எந்த டைரக்டராக இருந்தாலும் அவர்கள் சொல்லும் கதையில் ஏதாவது ஒரு வித்தியாசம் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறுகையில், நான் சினிமாவில் டிரண்டை மாற்றினேனா இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால் ரசிகர்கள் என்னை டிரண்ட் செட்டர் என்கிறார்கள். அதோடு, விஜய்சேதுபதி நடித்தால் வித்தியாசமான படமாகத்தான் இருக்கும் என்று முடிவு செய்து கொண்டே தியேட்டருக்கும் வருகிறார்கள். அதனால், அவர்களை ஏமாற்றாமல், ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொருவிதமான கதைகளில் நடிப்பதோடு, ரசிகர்களின் ரசனைக்கு நல்ல தீனி போடக்கூடிய படங்களாக கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். அதனால்தான், இதுவரை நண்பர்களுக்காக பட்ங்களை ஒத்துக்கொண்டு நடித்த நான், இப்போது கதைகளுக்கு மட்டுமே முதலிடம் கொடுக்கிறேன் என்கிறார் விஜய்சேதுபதி.