சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
மலையாளத்தில் அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்து விட்டு கோலிவுட்டுக்கு வந்திருக்கும் மியா ஜார்ஜ்க்கு அமரகாவியம் கைகொடுக்கவில்லை. இருப்பினும் அவரது நடிப்பு பலரை கவர்ந்தது. குறிப்பாக, அந்த படத்தை தனது தம்பி சத்யாவை வைத்து தயாரித்த ஆர்யாவே, மியாவின் நடிப்பை சில மலையாள படங்களில் பார்த்து வியந்துதான் அந்த படத்துக்கு ஒப்பந்தம் செய்தார்.
அதேபோல், மியாவும் அந்த படத்தில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். சில காட்சிகளில் சத்யா நடிப்பில் பின்வாங்கினபோதும் இவரே பேலன்ஸ் பண்ணி காட்சிகளை நகர்த்தியிருந்தார். அதைப்பார்த்து விட்டே இப்போது விஷ்ணு நடிக்கும் இன்று நேற்று நாளை படத்துக்கும் அவரை புக் பண்ணியுள்ளனர்.
அதனால் இந்த படத்தில் இன்னும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறாராம் மியா. சில காட்சிகளில் சிங்கிள் டேக்கில் அவர் உணர்வுப்பூர்வமாக நடித்ததைப்பார்த்து படப்பிடிப்பு தளத்தில் உள்ளவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்திருக்கிறார்கள். அதோடு, அவரது நடிப்பை கோலிவுட்டில் உள்ள மற்றவர்களிடம் புகழ்ந்து பேசி வருகிறார்கள.
அதனால். லட்சுமிமேனனின் மார்க்கெட் சரிந்து விட்ட நிலையில், அவர் இடத்தை பிடிக்க ஸ்ரீதிவ்யா, நந்திதா உள்ளிட்ட நடிகைகள் போராடிக்கொண்டிருக்க, இப்போது லட்சுமிமேனனை மனதில் கொண்டு கதை பண்ணிய டைரக்டர்களோ மியா ஜார்ஜ் பக்கம் திரும்பி நிற்கின்றனர். அதனால் இப்போது அவர் நடித்துள்ள படம் வெற்றி பெற்றால் மியாவின் கோலிவுட் மார்க்கெட் கிடுகிடுவென்று உயரும் நிலை ஏற்பட்டிருக்கிறது.