ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழில், வல்லினம் படத்தில் சிறிது கிளாமரோடு நடித்தவர் மிருதுளா. தமிழ் பெண்ணான மிருதுளா பெங்களூர்வாசி. மறுமுனை என்ற படத்திலும் நடித்தார். இரண்டு படங்களுமே வெற்றி பெறாததால் அதற்கு பிறகு பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில்தான் ராம்கோபால் வர்மாவின் தெலுங்கு படமான ஐஸ்கிரீம் 2 படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ராம்கோபால் வர்மா பெரிய இயக்குனராச்சே என்று அவர் படத்தில் நடிக்கச் சென்றார். ஐஸ் கிரீம் 2 குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஹாரர் படம். அதில் மிருதுளாவை படு கவர்ச்சியாக நடிக்க வைத்தார் ராம்கோபால் வர்மா. தெலுங்கில் கவர்ச்சிதான் சரிப்பட்டு வரும் என்று மிருதுளாவும் துணிச்சலாக நடித்தார். அதுவே அவருக்கு பிரச்னையாகிப்போனது. அந்தப் பட ரிலீசுக்கு பிறகு வந்த வாய்ப்புகள் அனைத்துமே ஐஸ்கிரீம் 2 மாதிரி கிளாமராக நடிக்க முடியுமா என்று கேட்டுத்தான் வந்தன.
இதனால் மிரண்டுபோன மிருதுளா பெங்களூருக்கே திரும்பி விட்டார். அங்கு ஒரு நடனப் பள்ளியை சொந்தமாக ஆரம்பித்து நடத்த ஆரம்பித்திருக்கிறார். என்றாலும் சென்னையில் உள்ள உறவினர்கள், நண்பர்கள் மூலமாக நல்ல தமிழ் பட வாய்ப்பையும் தேடிக் கொண்டிருக்கிறார்.