தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகன் ஹம்சவர்த்தன். தந்தை ரவிச்சந்திரன் இயக்கிய மானசீக காதலன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். யாரிடமும் சென்று உதவி கேட்டுப் பெறாத ரவிசந்திரன், தன் மகனை தன் சொந்த தயாரிப்பு படத்திலேயே அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு மந்திரன், புன்னகை தேசம், ஜூனியர் சீனியர் உள்பட பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
அதன் பிறகும் மகனுக்கு நல்ல இடம் கிடைக்கவில்லை என்றதும், மீண்டும் சொந்த தயாரிப்பில் மகனை ஹீரோவாக நடிக்க வைத்து பிறகு என்ற படத்தை இயக்கினார். ரவிச்சந்திரனுக்கும், ஹம்சவர்த்தனுக்கும் அதுதான் கடைசி படமாக இருந்தது.
ரவிச்சந்திரனின் மரணம் ஹம்சவர்த்தனுக்கு பெரும் துயரத்தைக் கொடுத்தது. அதிலிருந்து அவரால் மீள முடியவில்லை. அப்பா நடத்தி வந்த பிசினசையும் அவர் கவனிக்க வேண்டியது இருந்தது. இதனால் சினிமா ஆசையை ஒதுக்கி வைத்து விட்டு முழுநேர பிசினஸ்மேன் ஆனார். உடலை கவனிக்க மறந்ததால் அவரது எடை 115 கிலோவானது.
ஒரு கட்டத்தில் மீண்டும் சினிமா ஆசை வந்தது ஹம்சவர்த்தனுக்கு. இதனால் உடல் எடையை ஜிம்மே கதியென்று கிடந்து 20 கிலோ குறைத்தார். இப்போது அடுத்த படத்துக்கான ஆயத்த வேலைகளை ஆரம்பித்திருக்கிறார்.
"சினிமாவில்தான் நடிக்கவில்லையே என்ற கவனக்குறைவால் உடல் எடை கூடுவதைப் பற்றி கவலைப்படாமல் இருந்து விட்டேன். இப்போது 20 கிலோ குறைத்து விட்டேன். இன்னும் 10 கிலோ குறைக்க இருக்கிறேன். அதன் பிறகு படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறேன். நிறைய இயக்குனர்கள் கதை சொல்லி இருக்கிறார்கள். அதில் இன்றைய டிரெண்டுக்கு ஏற்ற மாதிரியான ஒரு கதையை தேர்வு செய்து நடிக்க முடிவு செய்திருக்கிறேன்" என்கிறார் ஹம்சவர்த்தன்.