ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துக்கொண்டிருந்த மதுரிமா தற்போது தமிழ் படங்களில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார். தமிழில், ஆம்பள படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த மதுரிமா தமிழுக்கென்று தனி கால்ஷீட் மானேஜரை நியமித்து தமிழ் வாய்புகள் தேடி வருகிறார். ஏற்கெனவே இவர் நடித்த, 'சேர்ந்து போலாமா' என்ற படம் முழுக்க முழுக்க நியூசிலாந்தில் படமாக்கப்பட்டது. அது இதுவரை வெளிவரவில்லை. இதனால் தமிழ் பக்கம் வராமல் தயங்கி நின்றார். ஆம்பள படத்தில் நல்ல பெயர் கிடைத்ததும் தமிழில் கால்பதிக்க முடிவு செய்திருக்கிறார்.
தற்போது, அவர் பிரபல மலையாள தயாரிப்பு நிறுவனமான மரிக்கார் பிலிம்ஸ் தயாரிக்கும் நச் என்ற படத்தில் நடிக்கிறார். இதில் அங்காடி தெரு மகேஷ், குளிர் 100 டிகிரி சஞ்சய், காளி, பூனம் ஜாவர் ஆகியோர் நடிக்கிறார்கள். திரைப்பட தயாரிப்பு பின்னணியில் நடக்கும் திகில் கதை.
"முன்பே நிறைய தமிழ் பட வாய்ப்புகள் வந்தது. ஆனால் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் நான் நடிக்கவில்லை அதோடு தெலுங்கு படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். நான் நடித்துள்ள இஷாக் நே கிரேஸி கியரா ரே என்ற இந்திப் படம் வெளிவர இருக்கிறது. டெம்பர் என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறேன். இனி தமிழில் தனி கவனம் செலுத்தி நடிக்க முடிவு செய்திருக்கிறேன்" என்கிறார் மதுரிமா.