டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அஜீத் நடிப்பில், கவுதம் மேனன் இயக்கி உள்ள படத்தில் அஜீத் ஜோடியாக அனுஷ்காவும், த்ரிஷாவும் நடித்துள்ளனர். இதில் த்ரிஷா படம் ஆரம்பித்த பிறகு சேர்க்கப்பட்டவர். படத்தின் கதைப்படி அஜீத்திற்கு ஒரு மனைவி உண்டு. மனைவியை வில்லன்கள் கொன்று விட அவர்களை பழிவாங்கும் பகுதியில் அவரை காதலிக்கும் பெண்ணாக அனுஷ்கா நடிக்க ஒப்பந்தமானது. பின்னர் மனைவி கேரக்டரில் த்ரிஷா சேர்க்கப்பட்டு அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் விரிவுபடுத்தப்பட்டதாகவும் இதனால் அனுஷ்காவுக்கும், இயக்குனருக்கும் மனகசப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. அதனை பற்றி தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினம் மற்றும் இயக்குனர் கவுதம் மேனன் ஆகியோர் இப்போது விளக்கம் அளித்துள்ளனர்.
இதுபற்றி அவர்கள் கூறியதாவது: த்ரிஷாவின் கேரக்டர் திணிக்கப்பட்டதல்ல கதையில் இருந்த கேரக்டர்தான். அனுஷ்காவுக்கும், த்ரிஷாவுக்கும் கருத்து வேறுபாடு எதுவும் ஏற்படவில்லை. கதை சொல்லும்போதே த்ரிஷாவின் கேரக்டர் மற்றும் காட்சிகள் பற்றி அனுஷ்காவிடமும், அனுஷ்காவின் கேரக்டர் மற்றும் காட்சிகள் பற்றி த்ரிஷாவிடம் வெளிப்படையாக சொல்லிவிட்டு சொன்னது போலவே படமாக்கினோம். கேரக்டரின் முக்கியத்துவம் கருதி த்ரிஷாவுக்காக தன் கேரக்டரையே விட்டுக் கொடுக்க முன்வந்து நடித்துக் கொடுத்தார் அனுஷ்கா. என்கிறார்கள்.