இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சென்னை செம்பியத்தை சேர்ந்த கோ.தேவராஜன் என்பவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: புகழ்பெற்ற நடிகர்கள் நடித்த படங்கள் வெளிவரும்போது நாள் ஒன்றுக்கு 5 முதல் 6 காட்சிகள் வரை நடத்துகிறார்கள். அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பல மடங்கு கூடுதலாக வசூலிக்கிறார்கள்.
இதுகுறித்து ஏற்கெனவே நான் கொடுத்த புகார் மீது புலன் விசாரணை மேற்கொண்டு குற்றச்சாட்டை கண்டுபிடிக்க முடியவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறியுள்ளனர். எனவே இந்த முறைகேட்டை கண்டுபிடிக்க சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு நேற்று (ஜன 27) விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையை வருகிற 30ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.