இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு தாணு தலைமையிலான புதிய நிர்வாகிகள் பதவியேற்றுள்ளனர். இதுவரை நடந்த தேர்தல்களிலேயே கலைப்புலி எஸ்.தாணுதான் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். அவர்மீது தயாரிப்பாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையே இதற்கு காரணம். தேர்தலில் வெற்றி பெற்ற அனைவரும் பதவியேற்றுக் கொண்டனர்.
பதவியேற்ற பின் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு பேசியதாவது: ஏவிஎம்.மெய்யப்ப செட்டியார், எஸ்.எஸ்.வாசன், டி.ஆர்.சுந்தரம், எல்.வி.பிரசாத், நாகிரெட்டி ஆகிய முன்னோர்களால் கட்டி காக்கப்பட்ட இந்த சங்கத்தின் மாண்பினை காப்பாற்றுவேன். எனது பதவி காலத்திற்குள் நான் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன்.
சமீபகாலத்தில் தயாரான 200க்கும் மேற்பட்ட படங்கள் சின்ன சின்ன பிரச்னைகள் காரணமாக வெளிவராமல் முடங்கிக் கிடக்கின்றன. பிரச்னை என்னவெற்று ஆராய்ந்து அந்தப் படங்களை வெளியிட திட்டமிட்டு செயலாற்றுவேன். தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள். முந்தைய நிர்வாகிகள், சங்கத்தின் முன்னோடிகள், அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர்கள் ஆகியோரின் ஒத்துழைப்போடும், வழிகாட்டுதலோடும் சங்கத்தை வழிநடத்துவேன். எனது வெற்றிக்கு ஒத்துழைப்பு தந்ததைப்போல எனது பணிகளுக்கும் தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தாணு பேசினார்.