'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இந்த வருடம் டில்லியில் நடைபெற்ற 66வது குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா நேரில் கலந்துகொண்டது ஒரு பெருமையான விஷயம் என்றால், மத்திய அரசின் சிறப்பு அழைப்பை ஏற்று கேரளாவில் இருந்து மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் தனது மனைவியுடன் கலந்துகொண்டது அவரது ரசிகர்களையும், ஏன் கேரளா மக்களையும் கூட சந்தோஷப்படுத்தியுள்ளது.
மோகன்லால் ராணுவத்தில் இருந்ததில்லை. ஆனால் ராணுவத்திற்கு பெருமைசேர்க்கும் விதமாக நிறைய ராணுவப்படங்களில் நடித்திருக்கிறார். அதனால் மோகன்லாலுக்கு சில வருடங்களுக்கு முன்பு மத்திய அரசு அவருக்கு கௌரவ ராணுவ கர்னல் பதவியை வழங்கி கௌரவப்படுத்தியது. இதனால் மோகன்லாலும் அவ்வப்போது ராணுவம் மற்றும் அரசு சம்பந்தப்பட்ட விழாக்களில் கலந்துகொண்டு வந்தார்.
அந்தவகையில் இப்போதும் 66வது குடியரசு தின விழாவில் கலந்துகொண்ட மோகன்லால், “அணிவகுப்பை பார்ப்பதற்காக காலை ஏழு மணிக்கே சென்றுவிட்டேன்.. அந்தசமயம் சற்று மழை தூறிக்கொண்டிருந்தாலும், மக்கள் கூட்டம் அதை பொருட்படுத்தாமல் விழாவைக்காண கூடி நின்றது பரவசமாக இருந்தது.. ஒரு இந்தியனாக இந்த விழாவில் கலந்துகொண்டதில் பெருமைப்படுகிறேன்” என கூறியுள்ளார்.