'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற எனக்கு தகுதி இல்லை என பாலிவுட் மெகாஸ்டார் அமிதாப் பச்சன் கூறியுள்ளார். பல்வேறு துறைகளில் சாதித்தவர்களை கவுரவிக்கும் வண்ணம், மத்திய அரசு, அவர்களுக்கு பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்நிலையில், அமிதாப் பச்சனுக்கு, மத்திய அரசு, பத்மவிபூஷண் விருது வழங்குவதாக அறிவித்துள்ளது. இதனிடையே, அமிதாப்பிற்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டுவிட்டரில் வலியுறுத்தியிருந்தார். இதற்கு பதிலளிக்கும்விதமாக, டுவிட்டரில், அமிதாப் குறிப்பிட்டிருப்பதாவது, எனக்கு மத்திய அரசு பத்மவிபூஷண் விருது அறிவித்திருப்பதையே பெரும் கவுரவமாக கருதுகிறேன். பாரத ரத்னா விருது பெருமளவிற்கு நான் தகுதியுடையவன் அல்ல என்று அதில் அமிதாப் குறிப்பிட்டுள்ளார்.