புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
1983-ல் கே.பாக்யராஜ் இயக்கி நடித்த படம் முந்தானை முடிச்சு. இந்த படத்தில் முதலில் நாயகியாக நடித்தவர் கல்பனா. அவருககு தமிழ் தெரியாது என்பதால் டயலாக் சொல்லிக்கொடுத்து நடிக்க வைக்க ரொம்பவே சிரமப்பட்டாராம் பாக்யராஜ். ஆனால் கல்பனாவுடன் தினமும் ஸ்பாட்டுக்கு வந்த அவரது தங்கையான ஊர்வசிக்கு தமிழ் நன்றாக வந்ததாம். அவர்தான் அக்காவுக்கு தமிழ் சொல்லிக்கொடுத்தாராம். இதைப்பார்த்த பாக்யராஜ், தமிழ் தெரியாத கல்பனாவிடம் கஷ்டப்படுவதோடு அவருக்கு பதிலாக அவரது தங்கை ஊர்வசியை நடிக்க வைத்தாலென்ன என்று அவரையே பின்னர் கதாநாயகி ஆக்கியிருக்கிறார். அப்போது ஊர்வசி ஒன்பதாம் வகுப்புதான் படித்து வந்தாராம். இந்நிலையில், அந்த படத்தின் பாடல்கள் விசயத்திலும் அதிக அக்கறை காட்டிய பாக்யராஜ், ஒரு பாடலை இளையராஜாவும், எஸ். ஜானகியும் சுமார் 7 முறை ரீடேக் ஆகி பாடிக்கொண்டிருந்தபோது, திடீரென்று அவருக்கு ஒரு யோசனை வர, பல்லவியை அதே டியூனுக்கு அவசர அவசரமாக மாற்றி எழுதிக்கொடுத்து, இதை பாடி விடுங்கள் என்றாராம்.
அதைக்கேட்ட இளையராஜா டென்சன் ஆகி விட்டாராம். 7 முறை பாடிய பிறகு எதற்காக பல்லவியை மாற்றுகிறீர்கள் என்று கோபித்துக்கொண்டாராம். அப்போது, ஒரு முழுப்பாடலையும் ரெக்கார்டிங் செய்த பிறகும் புதிய யோசனை தோன்றும்போது, புல்லாங்குழல் போன்ற ஏதேனும் இசைக்கருவிகளை மீண்டும் நீங்கள் அந்த பாடலில் சேர்ப்பதில்லையா அதேமாதிரிதான் இதுவும் என்று அவரிடம் சொல்லி, அந்த பல்லவியை பாட வைத்தாராம்.