ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
திருப்பாச்சி, சிவகாசி, திருத்தணி என பல படங்களை இயக்கியவர் பேரரசு. தற்போது திகார் என்ற படத்தை தமிழ், மலையாளத்தில் இய்க்கியுள்ளார். சரியான நேரத்தில் படத்தை வெளியிட நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில், சமீபகாலமாக எந்த சினிமா விழாக்களுக்கு அழைத்தாலும் கலந்து கொண்டு தான் கடந்து வந்த பாதையில் நடந்த சில விசயங்களையும் பகிர்ந்து கொண்டு வருகிறார் பேரரசு.
அந்த வகையில், விஜய் நடித்த திருப்பாச்சி படத்தை இயக்குவதற்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வினைப்பற்றி அவர் கூறுகையில், அந்த படத்தின் கதையை ரெடி பண்ணிய பிறகு சரியான தலைப்பே கிடைக்கவில்லை. 250 தலைப்புகளை எழுதி விட்டேன். எதுவுமே பிடிக்கவில்லை. இந்த நேரத்தில்தான் ஒருநாள் டிவியில் பாரதிராஜாவின் தாஜ்மஹால் படத்தின் பாடல் கேட்டேன். அதில் திருப்பாச்சி அருவாளை தூக்கிக்கிட்டு வாடா வாடா -என்ற பாடலை கேட்டபோதுதான், திருப்பாச்சி என்ற வார்த்தை பிடித்து விட, அதையே என் படத்துக்கு டைட்டிலாக வைத்தேன்.