விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
அனுஷ்கா நடித்து இன்னும் சில நாட்களில் தமிழில் 'என்னை அறிந்தால்' படம் வெளியாக உள்ளது. இதற்கடுத்து கோடை விடுமுறையில் தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ள 'பாகுபலி, ருத்ரமாதேவி' ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. அந்தப் படங்களுக்குப் பிறகு அனுஷ்கா நடித்து வேறு எந்த புதுப் படமும் இப்போதைக்கு வெளிவர வாய்ப்பில்லை. ஏனென்றால், அனுஷ்காவிற்கு தற்போது எந்தப் புதுப்படங்களும் ஒப்பந்தமாகவில்லை.
இந்தப் படங்களுக்குப் பிறகு அனுஷ்காவிற்குத் திருமணம் நடந்தாலும் நடக்கலாம் என வழக்கம் போல அவரைப் பற்றிய வதந்தி ஏற்கெனவே பரவ ஆரம்பித்துவிட்டது. அவருடைய பெற்றோர்கள் இந்த ஆண்டு கண்டிப்பாகத் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார்கள் என வதந்திக்கு அவரது குடும்பத்தாரையும் சேர்த்துக் கொள்கிறார்கள்.
'அருந்ததி' படம்தான் அனுஷ்கா இதுவரை நடித்துள்ள படங்களிலேயே அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. அதே அளவிற்கு 'பாகுபலி, ருத்ரமாதேவி' ஆகிய படங்களும் பெற்றுத் தரும் என்கிறார்கள். அதனால், அவருடைய திரையுலக வாழ்க்கையில் ஒரே நேரத்தில் இரண்டு பிரம்மாண்டமான படங்களில் நடித்ததே சாதனைதான். அதனால், காலாகாலத்தில் அவருக்குத் திருமணம் செய்து வைக்க அவருடைய பெற்றோர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள் என டோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.