'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பழம்பெரும் சண்டை இயக்குனர் சோமுவின் பேத்தி தர்ஷினி. இந்திரா படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர். அதன் பிறகு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் அடுத்தது என்ற படத்தில் நடித்தார். சினிமா சரியாக வராததால் மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு வந்தார்.
தற்போது நெஞ்சத்தை கிள்ளாதே, நாதஸ்வரம் தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு பிறகு அடுத்து என்ன செய்யலாம் என்ற தடுமாற்றத்தில் இருந்தார் தர்ஷினி, அந்த நேரத்தில் அவரது பேஸ்புக் தொடர்பில் இருந்த குஷ்புவிடம் நடிக்க சான்ஸ் கேட்டார். நேரில் அழைத்து பார்த்த குஷ்பு, தன்னுடைய பார்த்த ஞாபகம் இல்லையோ தொடரில் நடிக்க வைத்தார். குஷ்புதான் தர்ஷினிக்கு ரோல் மாடலாம்.