'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் அக்ஷய் குமார், தன்னை நடிகர் அக்ஷய் குமார் என்றே அழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அக்ஷய் குமார் கூறியுள்ளதாவது, சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார் என்று அழைப்பதை, என் மனம் ஒருபோதும் விரும்புவதில்லை. என்னை நடிகர் அக்ஷய் குமார் என்றே அழைத்தால் போதும். சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழி எனக்கு வேண்டாம். படத்தின் கதை பிடித்திருந்தால் மட்டுமே தான் நடித்து வருகிறேன். ஆண்டிற்கு ஒரு படம் நடித்தால் கூட போதும், ஆனால், அத்தகைய படங்கள், எனது ரசிகர்களுக்கு பிடித்தமானதாக மற்றும் நல்ல கருத்துகளை சொல்பவையாக இருக்க வேண்டும் என்பதே எனது திட்டம். ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடிக்க உள்ளதாக அவர் கூறினார்.