பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
வில்லனாக நடித்து ஹீரோவாக வளர்ந்த நடிகர்கள் பட்டியலில் இப்போது பாபி சிம்ஹாவும் இணைந்துள்ளார். அதுவும் ஒரே நேரத்தில் இறைவி, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது உறுமீன், பாம்புசட்டை என நான்கு படங்களில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிறார். நேரம், ஆ, ஆடாம ஜெயிச்சோமடா என பல படங்களில் அவர் நடித்தபோதும் ஜிகர்தண்டா என்ற ஒரே படம்தான் அவருக்கு இந்த அங்கீகாரத்தை கொடுத்துள்ளது.
ஆக, ஒரே நேரத்தில் கால்சீட்டை பிரித்துக் கொடுத்து நடித்து வரும் பாபி சிம்ஹா, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது படத்தில் நடித்து முடித்து விட்டார். இந்த படத்தில் 80 சதவிகிதம் அவர்தான் வருகிறாராம். அந்த அளவுக்கு அவருக்கே முழுக்க முழுக்க முக்கியத்துவம் கொடுத்து அந்த படத்தை தயாரித்துள்ளனர். மேலும், பாம்பு சட்டை படத்தில் பாபி சிம்ஹா கமிட்டாவதற்கு முன்பு ஜீவாதான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவரது யான் படம் கொடுத்த அதிர்ச்சி அவர் நடித்தால் வியாபாரம் சிக்கலாகி விடும் என்று பாபி பக்கம் திரும்பி விட்டார்களாம். ஆக, ஜீவாவின் இடத்துக்கு வந்து விட்டார் பாபி சிம்ஹா. இதேபோல் வேறு சில மார்க்கெட் இல்லாத ஹீரோக்கள் நடிக்க வேண்டிய படங்களும தற்போது பாபி சிம்ஹா பக்கம் திரும்பி நிற்பதாக கோலிவுட்டில் பேசிக்கொள்கிறார்கள்.