ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'ஆடுகளம்' திரைப்படம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் டாப்சி. அதன் பின் சில படங்களில் நடித்தாலும் அவரால் முன்னணி நடிகை வரிசையில் இடம் பெற முடியவில்லை. தெலுங்குப் படங்களில் நடித்து ஓரளவிற்கு பேசப்பட்டவர் 2013ல் வெளிவந்த 'சாஸ்மி பாதூர்' என்ற ஹிந்திப் படத்தில் நடித்தார். அதன் பிறகு தற்போது அக்ஷய் குமாருடன் இணைந்து 'பேபி' என்ற படத்தில் நடித்தார். கடந்த வாரம் வெளிவந்த அந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
படத்தில் நடித்ததைப் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் டாப்சி கூறியிருப்பதாவது, “பேபி' திரைப்படம் என்னுடைய ஹிந்தி திரையுலகப் பயணத்தை வேறு ஒரு கட்டத்திற்குக் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கிறேன். நல்ல சவாலான கதாபாத்திரம் கிடைத்தால்தான் ஒரு நடிகையால் அவர்களது திறமையை நிரூபிக்க முடியும். திறமையுள்ள பலருக்கும் அப்படி கிடைக்கும் போதுதான் அவர்களைப் பற்றி வெளிக் காட்ட முடியும். என்னை பலரும் கிளாமரான கதாபாத்திரங்களுக்குத்தான் பொருத்தமானவள் என நினைக்கிறார்கள். ஆனால், 'பேபி' படத்தைப் பார்த்த பிறகு அவர்களது எண்ணம் மாறிவிடும்.
காதல் திரைப்படங்களில் கிளாமரான கதாபாத்திரங்கள்தான் கிடைக்கும். அவற்றில் நடிக்காமல் விட்டுவிட்டால் என்னை விட முட்டாள் யாருமிருக்க முடியாது. இப்பேதெல்லாம் காதல் படங்களுடன் மக்கள் நிறையே ஒன்றி விட்டார்கள். அவற்றில் சில நெருக்கமான காட்சிகள் இருப்பதைத் தவிர்க்க முடியாது,” என்றும் சொல்லியிருக்கிறார்.
தமிழில் டாப்சி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'வை ராஜா வை' விரைவில் வெளியாக உள்ளது.