இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
அஜித் நடித்து விரைவில் வெளியாக உள்ள 'என்னை அறிந்தால்' படத்தின் தலைப்பிற்காக அஜித் கண்டிஷன் ஒன்றைப் போட்டிருக்கிறார். “ஆரம்பம், வீரம்” ஆகிய படங்களின் தலைப்புகள் கூட அவற்றின் படப்பிடிப்பு ஆரம்பமான பிறகுதான் வைக்கப்பட்டது. 'என்னை அறிந்தால்' படத்தின் தலைப்பு கூட படம் ஏறக்குறைய முடிவடையும் நிலைக்கு வந்த பிறகுதான் அறிவிக்கப்பட்டது. அப்படி ஒரு தலைப்பை வைப்பதற்குக் கூட முதலில் அஜித் தயங்கினார் என்ற தகவலை இயக்குனர் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.
“படத்துக்கு முதல்ல என்ன மாதிரி தலைப்பு வைக்கலாம்னு பேசிட்டிருக்கும் போது, அஜித் சார், “நான், என்னை, நீ...அப்படி வர்ற மாதிரி எதுவும் வைக்காதீங்கன்னு சொன்னாரு. அப்புறம் எந்த மாதிரி இருந்தால் நல்லா இருக்கும்னு யோசிச்ச பிறகு எனக்கு இந்த டைட்டில் தோணுச்சி. சரின்னு அஜித் சார் கிட்ட, கதைக்குப் பொருத்தமா இந்த டைட்டில் இருக்கும்னு சொன்னேன். அவரும் சரின்னு சம்மதிச்சாரு.
'என்னை அறிந்தால்....'ங்கறத அடுத்து நீங்க எப்படி வேணாம் பிக்ஸ் பண்ணிக்கலாம். 'என்னை அறிந்தால்...நீ என்னுடன் மோத மாட்டாய், 'என்னை அறிந்தால்...நீ தாங்க மாட்டாய்...' இப்படி எது வேணாலும் மீதி நீங்க எழுதிக்கலாம். கதைக்குப் பொருத்தமான, ஒரு பவர் ஃபுல்லான டைட்டிலா இது இருக்கும், படம் பார்க்கும் போது உங்களுக்கு அது புரியும்,” என்றார் இயக்குனர் கௌதம் மேனன்.
ஒரு படம் எடுக்க பணம் கூட கிடைச்சிடும் போல இருக்கு, பொருத்தமான டைட்டில்தான் கிடைக்க மாட்டேங்குது...!