ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ராவுத்தர் தியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் அ.செ.இப்ராஹிம் ராவுத்தர் தயாரித்துள்ள புலன் விசாரணை 2 படத்தை ஆர்.கே.செல்வமணி இயக்கி உள்ளார், பிரசாந்த், கார்த்திகா நடித்துள்ளனர். நீண்டநாள் கிடப்பில் இருந்த படத்தை தற்போது வருகிற 29ந் தேதி வெளியிட முயற்சித்து வருகிறார் இப்ராஹிம் ராவுத்தர்.
இதற்கிடையில் புலன் விசாரணை படத்தை திருட்டு விசிடி தயாரித்து விற்க சிலர் முயற்சித்து வருவதாக இப்ராஹிம் ராவுத்தரும், ஆர்.கே.செல்வமணியும் போலீஸ் கமிஷனரைச் சந்தித்து புகார் கொடுத்தனர். இப்போது திருட்டு விசிடி வெளிவருவதை தடுக்க சில ரகசிய தொழில்நுட்ப விஷங்களை படத்தின் பிரிண்டில் வைத்திருப்பதாக கூறுகிறார்கள்.
இதுகுறித்து இயக்குனர் ஆர்.கே.செல்வமணியும், தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தரும் கூறியதாவது: புலன் விசாரணை 2 வை வருகிற 29ந் தேதி தமிழ்நாட்டில் மட்டும் 250 தியேட்டர்களில் வெளியிடுகிறோம். திருட்டு விசிடியை தடுப்பதற்காக வெளிநாட்டு உரிமமோ டி.வி.டி உரிமமோ, டி.வி. உரிமமோ கொடுக்க வில்லை. 250 பிரிண்டிலும் ரகசிய டெக்னிக் விஷயம் ஒன்றை வைத்திருக்கிறோம்.
இப்போது தியேட்டரில் திருட்டு விசிடி எடுப்பவர்கள். ஆடியோவை ஒரு தியேட்டரிலும், வீடியோவை ஒரு தியேட்டரிலும் பதிவு செய்கிறார்கள். இதனால் வீடியோ பதிவு செய்வதை தடுக்க ஷேடோ மார்க்கிங் வைத்திருக்கிறோம். ஆடியோ பதிவை தடுக்க சைலண்ட் மார்க்கிங் வைத்திருக்கிறோம். பதிவு செய்யும்போது அருகில் உள்ள செல்பொன் டவரின் விபரங்கள் பதிவாகிவிடும். அதை வைத்து எங்கு காப்பி எடுக்கப்பட்டது என்பதை கண்டுபிடித்து விட முடியும். இதைக் போலீசிடம் கொடுத்து சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த முடியும்.
இந்த புதிய தொழில்நுட்பத்தை புலன் விசாரணையில் துவங்கிறோம். விருப்பம் உள்ளவர்கள் இதை பின்பற்றலாம். இதற்கு தனி செலவோ, கட்டணமோ கிடையாது. என்றார்.