விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் |
மதுமிதா இயக்கும், ''மூணே மூணு வார்த்தை'' படம் தமிழ், தெலுங்கு என்ற இரண்டு மொழிகளில் தயாராகிறது. எஸ்.பி.பி.சரண் தயாரிக்கிறார். இதில் தமிழில் அர்ஜுன் ஹீரோவாக நடிக்கிறார், தெலுங்கில் ராக்கி ஹீரோவாக நடிக்கிறார். இரண்டு மொழிக்கும் ஹீரோயின் அதிதி செங்கப்பா. காதல் காட்சிகள், பாடல் காட்சிகள் அனைத்தும் இரண்டு மொழிக்கும் சேர்த்து எடுக்கப்பட்டதால் ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார் அதிதி.
இதுபற்றி அவர் கூறியதாவது: வசன காட்சிகளில் தெலுங்கு வசனத்தை சரளமாக பேசி விடுவேன். தமிழ் வசனம் பேச திணறுவேன். இதனால் வெங்கி காட்சி ஓரிரு டேக்கில் முடிந்து விடும், அர்ஜுன் காட்சி நிறைய டேக் போகும். பாடல் காட்சியில் வெங்கி நிறைய டேக் எடுத்துக்குவார். அர்ஜுன் ஓரிரு டேக்கில் ஓகே பண்ணிவிடுவார். இருவரையும் சமாளிப்பது சிரமமாக இருந்தது.
நம்மை விட அவருடன் நடிக்கும்போது நன்றாக நடிக்கிறார், ஆடுகிறார் என்கிற பிரச்சினை வந்துவிடக்கூடாது என்று மிகவும் கவனமாக நடிக்க வேண்டியது இருந்தது. இயக்குனர் மதுமிதா சாதுர்யமாக அதனை சமாளித்தார். அவருக்குதான் நன்றி சொல்ல வேண்டும். என்கிறார் அதிதி.